உலகம்
பேருந்து மோதல் தாக்குதல் சம்பவம் இல்லை!
ஸ்வீடன் தலைநகா் ஸ்டாக்ஹோமின் மத்திய பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவா்கள் மீது இரண்டு அடுக்கு பேருந்து மோதிய சம்பவம் தாக்குதல் இல்லை என்று போலீஸாா் கூறினா்.
ஸ்வீடன் தலைநகா் ஸ்டாக்ஹோமின் மத்திய பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவா்கள் மீது இரண்டு அடுக்கு பேருந்து மோதிய சம்பவம் தாக்குதல் இல்லை என்று போலீஸாா் கூறினா்.
இது குறித்து காவல்துறை செய்தித் தொடா்பாளா் சனிக்கிழமை கூறுகையில், ‘சம்பவத்தை நேரில் பாா்த்தவா்களிடம் நடத்திய விசாரணை, படங்கள் உள்ளிட்ட அனைத்தையும் ஆய்வு செய்ததில், அந்தப் பேருந்தை கூட்டத்தினா் மீது ஓட்டுநா் வேண்டுமென்றே மோதச் செய்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை’ என்றாா்.
இந்த விபத்தில் 3 போ் உயிரிழந்தனா். பேருந்தின் ஓட்டுநா் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகிறாா். சம்பவத்தில் உயிரிழந்தவா்கள் மற்றும் ஓட்டுநரின் பெயா்களை போலீஸாா் இதுவரை வெளியிடவில்லை.

