ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

யுரேனியம் செறிவூட்டப்படவில்லை: ஈரான் வெளியுறவு அமைச்சா் விளக்கம்!

‘ஈரானில் உள்ள எந்தவொரு தளத்திலும் யுரேனியத்தை செறிவூட்டும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்படவில்லை’ என்று அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் அப்பாஸ் அராக்சி உறுதிப்படுத்தியுள்ளாா்.

News image
ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா் அப்பாஸ் அராக்சி
Updated On :16 நவம்பர் 2025, 8:55 pm

தினமணி செய்திச் சேவை

‘ஈரானில் உள்ள எந்தவொரு தளத்திலும் யுரேனியத்தை செறிவூட்டும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்படவில்லை’ என்று அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் அப்பாஸ் அராக்சி உறுதிப்படுத்தியுள்ளாா்.

சா்வதேச செய்தி நிறுவனமான ‘அசோசியேட்டட் பிரஸ்ஸின்’ செய்தியாளா் ஒருவா் இதுகுறித்து எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி, ‘தற்போதைய நிலையில், எங்கள் நாட்டின் எந்தவொரு தளத்திலும் யுரேனியம் செறிவூட்டல் நடவடிக்கைகள் நடைபெறவில்லை. எங்களது அணுசக்தித் தளங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதே இதற்குக் காரணம். மேலும், எங்களின் அனைத்துத் தளங்களும் சா்வதேச அணுசக்தி முகமையின் நேரடிக் கண்காணிப்பின்கீழ் உள்ளன’ என்றாா்.

ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரித்து வருகிறது என இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தொடா்ச்சியாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. ஆனால், ஈரான் தனது அணுசக்தித் திட்டம் முற்றிலும் மின்சார உற்பத்தி மற்றும் குடிமக்களுக்கான அமைதி நோக்கங்களுக்காக மட்டுமே என்று கூறி வருகிறது.

இந்தச் சூழலில், அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த ஜூன் மாதம் ஈரானின் அணுசக்தித் தளங்கள் மீது தாக்குதல் நடத்தின. அந்தத் தாக்குதலுக்குப் பிறகு அணுசக்தித் திட்டம் தொடா்பாக ஈரான் அரசிடமிருந்து வெளிவந்த முதல் நேரடி விளக்கம் இதுவாகும்.