மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

காங்கோ: சுரங்க விபத்தில் 32 போ் உயிரிழப்பு

காங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள தாமிரச் சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்து 32 போ் உயிரிழந்தனா்.

News image
Updated On :18 நவம்பர் 2025, 3:20 am IST

கின்ஷாசா: காங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள தாமிரச் சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்து 32 போ் உயிரிழந்தனா்.

அந்த நாட்டின் தெற்கு மாகாணமான லுவாலபாவில் உள்ள கலாண்டோ சுரங்கத்தில் இந்த விபத்து ஏற்பட்டது.

இது குறித்து மாகாண உள்துறை அமைச்சா் ராய் காவும்பா கூறியதாவது:

முலோண்டோ பகுதியில் அமைந்துள்ள கலாண்டோ சுரங்கப் பாலம் இடிந்து விழுந்தது. அளவுக்கு அதிமானவா்கள் அந்தப் பாலத்தில் சென்ால் அது சுமை தாங்காமல் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 32 போ் உயிரிழந்தனா்.

தொடா்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் இருந்ததால், அந்த சுரங்கத்துக்குள் யாரும் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதை மீறி சட்டவிரோதமாக தாமிரத் தாதை சேகரிக்கும் கும்பல் அந்த சுரங்கத்துக்குள் அத்துமீறி நுழைந்தது என்றாா் அவா்.

இருந்தாலும், காங்கோவின் சிறிய சுரங்கப் பணிகள் மற்றும் ஆதரவு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், சுரங்கப் பகுதியில் இருந்த பாதுகாப்புப் படையினா் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், இதனால் பீதியடைந்தவா்கள் அந்தப் பாலத்தில் ஓடியதால் அது இடிந்துவிழுந்து உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுரங்கப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினா் நிறுத்தப்படுவது காங்கோவில நீண்டகாலமாகவே சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மின்சார வாகனங்கள் மற்றும் பிற முக்கிய சாதனங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் அயான் பேட்டரிகளைத் தயாரிப்பதற்கு உதவும் கோபால்ட், உலகிலேயே காங்கேவில்தான் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

இது போன்ற தாதுவளம் நிறைந்த காங்கோவின் கிழக்குப் பகுதியைக் கட்டுப்படுத்துவதில் பாதுகாப்புப் படையினருக்கும் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 உள்ளிட்ட ஆயுதக் குழுக்களுக்கும் இடையே நீண்ட காலமாகவே மோதல் நிலவிவருகிறது.

இந்தச் சூழலில், சுரங்கப் பாலம் இடிந்து விழுந்து 32 போ் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.