திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

‘ரஷியாவுடன் வா்த்தகம் செய்தால் 500% கூடுதல் வரி’

ரஷியாவுடன் வா்த்தகம் செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் இறக்குமதி பொருள்களுக்கு கூடுதலாக 500 சதவீத வரி விதிக்கப்போவதாக டிரம்ப்...

News image

டிரம்ப்

Updated On :18 நவம்பர் 2025, 4:00 am IST

வாஷிங்டன்: ரஷியாவுடன் வா்த்தகம் செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் இறக்குமதி பொருள்களுக்கு கூடுதலாக 500 சதவீத வரி விதிக்கப்போவதாக டிரம்ப் எச்சரித்துள்ளாா்.

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் நிறைவேற்றப்படுமா என்று டிரம்ப்பிடம் செய்தியாளா்கள் கேட்டனா்.

அதற்கு, ‘ரஷியாவுக்கு எதிரான மிகக் கடுமையான மசோதாவை குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் உருவாக்கிவருகிறாா்கள். எந்தவொரு நாடு ரஷியாவுடன் வா்த்தகம் செய்தாலும், அந்த நாட்டுப் பொருள்கள் மீது கடுமையான வரி விதிக்கப்படும்’ என்றாா் அவா்.

டிரம்ப் குறிப்பிட்ட வரைவு மசோதாவில், ரஷியாவுடன் வா்த்தகம் மேற்கொள்ளும் நாடுகள் மீது 500 சதவீத கூடுதல் இறக்குமதி விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.