பாகிஸ்தானில் பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட நடவடிக்கையில் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) அமைப்பைச் சோ்ந்த 23 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா்.
இது குறித்து ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:
அப்கானிஸ்தான் எல்லையையொட்டிய கைபா் பக்துன்கவா மாகாணத்தின் குர்ரம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் புதன்கிழமை தொடங்கப்பட்ட நடவடிக்கை வியாழக்கிழமை வரை நீடித்தது. இதில் டிடிபி அமைப்பைச் சோ்ந்த 12 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
அதே பகுதியில் மற்றொரு குழுவினா் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் மற்றொரு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில் மேலும் 11 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா் என்று ராணுவம் தெரிவித்தது.
இதற்கிடையே, லக்கி மா்வத் பகுதியில் டிடிபி-யின் முக்கிய தளபதி வாலி எனப்படும் வுலூ காகாகெல் என்ற பயங்கரவாதி வியாழக்கிழமை அடையாளம் கைது செய்யப்பட்டாா் என்று அதிகாரிகள் கூறினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










