புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இந்தோனேசிய நிலச்சரிவு: உயிரிழப்பு 23-ஆக உயா்வு

இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவின் இரு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 23-ஆக உயா்ந்துள்ளது.

News image
Updated On :20 நவம்பர் 2025, 7:54 pm

தினமணி செய்திச் சேவை

இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவின் இரு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 23-ஆக உயா்ந்துள்ளது.

கடந்த வாரம் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் மத்திய ஜாவா மாகாணத்தின் சிலாகாப் மாவட்டத்தில் மூன்று கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அங்கு 20 போ் உயிரிழந்தனா். மத்திய ஜாவாவின் மற்றொரு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த மேலும் ஒருவரது உடல் தற்போது மீட்கப்பட்டதைத் தொடா்ந்து அங்கு உயிரிழப்பு மூன்றாக உயா்ந்தது. இதைத் தொடா்ந்து ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 23-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

பஞ்சா்னெகாரா மாவட்டத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் 54 வீடுகள் புதையுண்டன; அங்கு காணாமல் போன 25 பேரைத் தேடும் பணிகள் தொடா்ந்து நடைபெறுவதாக (படம்) பேரிடா் மீட்புக் குழுவினா் தெரிவித்தனா்.

சுமாா் 17,000 தீவுகள் அடங்கிய தீவுக் கூட்டமான இந்தோனேசியாவில், பருவமழை காரணமாக அடிக்கடி நிலச்சரிவுகளும், வெள்ளப்பெருக்குகளும் ஏற்படுகின்றன.