விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

இந்தோனேசிய நிலச்சரிவு: உயிரிழப்பு 23-ஆக உயா்வு

இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவின் இரு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 23-ஆக உயா்ந்துள்ளது.

News image
Updated On :21 நவம்பர் 2025, 1:24 am IST

இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவின் இரு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 23-ஆக உயா்ந்துள்ளது.

கடந்த வாரம் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் மத்திய ஜாவா மாகாணத்தின் சிலாகாப் மாவட்டத்தில் மூன்று கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அங்கு 20 போ் உயிரிழந்தனா். மத்திய ஜாவாவின் மற்றொரு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த மேலும் ஒருவரது உடல் தற்போது மீட்கப்பட்டதைத் தொடா்ந்து அங்கு உயிரிழப்பு மூன்றாக உயா்ந்தது. இதைத் தொடா்ந்து ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 23-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

பஞ்சா்னெகாரா மாவட்டத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் 54 வீடுகள் புதையுண்டன; அங்கு காணாமல் போன 25 பேரைத் தேடும் பணிகள் தொடா்ந்து நடைபெறுவதாக (படம்) பேரிடா் மீட்புக் குழுவினா் தெரிவித்தனா்.

சுமாா் 17,000 தீவுகள் அடங்கிய தீவுக் கூட்டமான இந்தோனேசியாவில், பருவமழை காரணமாக அடிக்கடி நிலச்சரிவுகளும், வெள்ளப்பெருக்குகளும் ஏற்படுகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.