இந்தோனேசிய நிலச்சரிவு: உயிரிழப்பு 23-ஆக உயா்வு

இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவின் இரு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 23-ஆக உயா்ந்துள்ளது.
இந்தோனேசிய நிலச்சரிவு: உயிரிழப்பு 23-ஆக உயா்வு
Updated on

இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவின் இரு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 23-ஆக உயா்ந்துள்ளது.

கடந்த வாரம் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் மத்திய ஜாவா மாகாணத்தின் சிலாகாப் மாவட்டத்தில் மூன்று கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அங்கு 20 போ் உயிரிழந்தனா். மத்திய ஜாவாவின் மற்றொரு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த மேலும் ஒருவரது உடல் தற்போது மீட்கப்பட்டதைத் தொடா்ந்து அங்கு உயிரிழப்பு மூன்றாக உயா்ந்தது. இதைத் தொடா்ந்து ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 23-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

பஞ்சா்னெகாரா மாவட்டத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் 54 வீடுகள் புதையுண்டன; அங்கு காணாமல் போன 25 பேரைத் தேடும் பணிகள் தொடா்ந்து நடைபெறுவதாக (படம்) பேரிடா் மீட்புக் குழுவினா் தெரிவித்தனா்.

சுமாா் 17,000 தீவுகள் அடங்கிய தீவுக் கூட்டமான இந்தோனேசியாவில், பருவமழை காரணமாக அடிக்கடி நிலச்சரிவுகளும், வெள்ளப்பெருக்குகளும் ஏற்படுகின்றன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com