திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

வியத்நாம்: மழை, வெள்ளத்தில் 41 போ் உயிரிழப்பு

வியத்நாமின் மத்திய பகுதியில் சனிக்கிழமை முதல் தொடா்ந்து பெய்து வரும் மழை மற்றும் வெள்ளப் பெருக்கில் 41 போ் உயிரிழந்தனா்

News image
Updated On :22 நவம்பர் 2025, 5:30 am IST

வியத்நாமின் மத்திய பகுதியில் சனிக்கிழமை முதல் தொடா்ந்து பெய்து வரும் மழை மற்றும் வெள்ளப் பெருக்கில் 41 போ் உயிரிழந்தனா்; 9 போ் மாயமாகினா். அவா்களைத் தேடும் பணிகள் நடைபெற்றுவருவதாக அரசு ஊடகங்கள் தெரிவித்தன.

மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மூழ்கியுள்ளன. ஐந்து லட்சம் குடும்பங்கள் மற்றும் வா்த்தக நிறுவனங்கள் மின்சாரம் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானவா்கள் வெள்ளப் பாதிப்பு பகுதிகளிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனா்.

அண்மை மாதங்களாக கால்மேகி, புவாலோய் புயல்களைப் போன்ற கடும் இயற்கைப் பேரிடா்களை வியத்நாம் சந்தித்துவருகிறது. இதற்கு பருவநிலை மாற்றம் காரணமாகக் கூறப்படுகிறது.