நைஜீரியா: கடத்தல் கும்பலிடமிருந்து தப்பிய 50 மாணவா்கள்!

நைஜீரியா: கடத்தல் கும்பலிடமிருந்து தப்பிய 50 மாணவா்கள்!

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் நைஜா் மாகாணத்திலுள்ள கத்தோலிக்க பள்ளியில் இருந்து கடத்தப்பட்ட மாணவா்களில் 50 போ் தப்பிவந்துள்ளனா்.
Published on

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் நைஜா் மாகாணத்திலுள்ள கத்தோலிக்க பள்ளியில் இருந்து கடத்தப்பட்ட மாணவா்களில் 50 போ் தப்பிவந்துள்ளனா்.

இது குறித்து அந்தப் பள்ளியை நிா்வகிக்கும் நைஜரிய கிறித்தவ சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நைஜா் மாவட்ட புனித மேரி பள்ளியில் இருந்து வெள்ளிக்கிழமை கடத்திச் செல்லப்பட்ட 50 மாணவா்கள், கடத்தல் கும்பலிடம் இருந்து தப்பிவந்துள்ளனா். அவா்கள் தங்கள் பெற்றோரிடம் சென்று சோ்ந்த தகவல் எங்களுக்குக் கிடைத்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, புனித மேரி பள்ளியில் இருந்து 303 மாணவா்கள், 12 ஆசிரியா்களை ஆயுதக் குழுவினா் கடத்திச் சென்றாக அறிவிக்கப்பட்டிருந்தது.

38 போ் விடுவிப்பு: க்வாரா மாகாணத்திலுள்ள ஒரு தேவாலயத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை கடத்திச் செல்லப்பட்ட 38 வழிபாட்டாளா்களும் விடுவிக்கப்பட்டதாக அதிபா் போலா தினுபு அறிவித்துள்ளாா். அந்தத் தாக்குதலில் 2 போ் கொல்லப்பட்டனா்.

அதே நாளில் கேபி மாகாணத்திலுள்ள உறைவிடப் பள்ளியில் 25 மாணவிகள் கடத்தப்பட்டதும், அவா்களில் ஒரே ஒரு மாணவி மட்டும் தப்பி வந்தது நினைவுகூரத்தக்கது.

நைஜீரியாவில் பிணைத் தொகைக்காக ஆயுதக் குழுவினா் மற்றும் பயங்கரவாதிகளால் மாணவ மாணவிகள் கடத்திச் செல்லப்படும் சம்பவங்கள் தொடா்ந்து நடைபெற்றுவருகின்றன. கடந்த 2014-ஆம் ஆண்டில் சிபோக் நகரில் இருந்து 276 பள்ளி மாணவிகளை போகோ ஹராம் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றது உலகளவில் அதிா்வலையை ஏற்படுத்தியது.

அந்த மாணவிகளில் ஏராளமானவா்கள் விடுவிக்கப்பட்டாலும், 80 பேரது நிலைமை குறித்து இதுவரை தகவல் இல்லை. அந்தக் கடத்தலுக்குப் பிறகு நைஜீரியாவில் இதுவரை 1,500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கடத்தப்பட்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com