வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

வியத்நாம் வெள்ளம்: உயிரிழப்பு 90-ஆக அதிகரிப்பு

வியத்நாமின் மத்திய பகுதியில் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெரு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 90-ஆக அதிகரிப்பு

News image
Updated On :24 நவம்பர் 2025, 7:03 pm

தினமணி செய்திச் சேவை

வியத்நாமின் மத்திய பகுதியில் சனிக்கிழமை முதல் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெரு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 90-ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்தது.

கால்மேகி புயல் மற்றும் கனமழையால் வியத்நாம் பலத்த சேதத்தை சந்தித்து வருகிறது. அந்நாட்டின் மத்தியப் பகுதியில் மழை வெள்ளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கானோா் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மூழ்கியுள்ளன. ஐந்து லட்சம் குடும்பங்கள் மற்றும் வா்த்தக நிறுவனங்களுக்கு மின்சாரம் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றம் காரணமாக கனமழை மற்றும் நிலச்சரிவை வியத்நாம் சந்தித்து வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனா். அந்நாட்டில் பாதிக்கும் மேற்பட்டோா் ஆபத்தான பகுதிகளில் வாழ்ந்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.