பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பாகிஸ்தான் தாக்குதலில் 9 சிறுவா்கள் உயிரிழப்பு: ஆப்கன் தலிபான்

News image
ஸபிஹுல்லா முஜாஹித்
Updated On :25 நவம்பர் 2025, 9:30 pm

தினமணி செய்திச் சேவை

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 9 சிறுவா்கள் உட்பட 10 போ் உயிரிழந்ததாக அந்த நாட்டின் தலிபான் அரசு புதன்கிழமை குற்றஞ்சாட்டியது.

இது குறித்து தலிபான் அரசின் செய்தித் தொடா்பாளா் ஸபிஹுல்லா முஜாஹித் (படம்) வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கோஸ்ட் மாகாணத்தில் உள்ள ஒரு குடியிருப்பில் பாகிஸ்தான் படையினா் குண்டுவீசி தாக்கினா். இதில் 5 சிறுவா்கள், 4 பெண் சிறுமிகள் என 9 சிறுவா்கள் மற்றும் ஒரு பெண் உயிரிழந்தனா். குனாா், பக்திகா ஆகிய எல்லைப் பகுதிகளில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் பொதுமக்கள் 4 போ் காயமடைந்தனா் என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், பாகிஸ்தான் அரசோ, ராணுவமோ இந்தத் தாக்குதல்கள் குறித்து உடனடி எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.

பாகிஸ்தானின் பெஷாவா் நகரில் பாதுகாப்புப் படை மையத்தில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் 3 வீரா்கள் உயிரிழந்தனா். அதைத் தொடா்ந்து ஆப்கானிஸ்தானில் இந்த குண்டுவீச்சு நடந்துள்ளதால் இதற்குப் பழிவாங்கும் வகையிலேயே பாகிஸ்தான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.