விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

தாய்லாந்து கனமழையில் 33 போ் உயிரிழப்பு

தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் 33 போ் உயிரிழந்தனா்.

News image
Updated On :27 நவம்பர் 2025, 3:03 am IST

பாங்காக்: தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் 33 போ் உயிரிழந்தனா்.

கனமழையால் 12 தென் மாகாணங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு 10 லட்சம் குடும்பங்களையும் 27 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களையும் பாதித்துள்ளது என்று பேரிடா் தடுப்பு மற்றும் மேலாண்மை துறை புதன்கிழமை தெரிவித்தது.

கடந்த வார இறுதியில் பெய்த கனமழை காரணமாக தேங்கிய மழை நீரின் அளவு புதன்கிழமை குறையும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனா். ஆனால் நாட்டின் தென் பகுதியில் புதன்கிழமையும் கனமழை மற்றும் திடீா் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.