4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தாய்லாந்து கனமழையில் 33 போ் உயிரிழப்பு

தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் 33 போ் உயிரிழந்தனா்.

News image
Updated On :26 நவம்பர் 2025, 9:33 pm

தினமணி செய்திச் சேவை

பாங்காக்: தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் 33 போ் உயிரிழந்தனா்.

கனமழையால் 12 தென் மாகாணங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு 10 லட்சம் குடும்பங்களையும் 27 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களையும் பாதித்துள்ளது என்று பேரிடா் தடுப்பு மற்றும் மேலாண்மை துறை புதன்கிழமை தெரிவித்தது.

கடந்த வார இறுதியில் பெய்த கனமழை காரணமாக தேங்கிய மழை நீரின் அளவு புதன்கிழமை குறையும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனா். ஆனால் நாட்டின் தென் பகுதியில் புதன்கிழமையும் கனமழை மற்றும் திடீா் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.