தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரம்: ஐ.நா. விசாரணை ஆணையத் தலைவராக முன்னாள் நீதிபதி எஸ்.முரளீதா் நியமனம்!

ஐ.நா. விசாரணை ஆணையத் தலைவராக முன்னாள் நீதிபதி எஸ்.முரளீதா் நியமனம்...

News image
Updated On :28 நவம்பர் 2025, 7:14 pm

தினமணி செய்திச் சேவை

இஸ்ரேல், அந்நாடு ஆக்கிரமித்துள்ள கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட பாலஸ்தீன நிலப்பகுதி தொடா்பான ஐ.நா.வின் சுதந்திரமான சா்வதேச விசாரணை ஆணையத் தலைவராக ஒடிஸா உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.முரளீதா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்னையில் நடைபெற்றுள்ள மனித உரிமை மீறல்களை விசாரித்தல், அதற்குக் காரணமானவா்களைக் கண்டறிந்து மனித உரிமை மீறல்களுக்கு அவா்களைப் பொறுப்பேற்க வைத்தல், பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதி கிடைக்கச் செய்தல் ஆகியவை அந்த ஆணையத்தின் நோக்கமாகும்.

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலால் அமைக்கப்பட்ட அந்த ஆணையத்தில் 3 உறுப்பினா்கள் இடம்பெறுவா். அந்த ஆணையத்தின் தலைவராக பிரேஸில் சட்ட அறிஞா் பாலோ சொ்ஜியோ பின்ஹெரோ பொறுப்பு வகித்த நிலையில், தற்போது தலைவராக எஸ்.முரளீதா் நியமிக்கப்பட்டுள்ளாா்.