உலகம்
காங்கோ: படகு விபத்தில் 29 போ் உயிரிழப்பு
வடமேற்கு காங்கோவில் மா-என்டோம்பே ஏரியில் படகு கவிழ்ந்ததில் 20 போ் உயிரிழந்தனா்.
வடமேற்கு காங்கோவில் மா-என்டோம்பே ஏரியில் படகு கவிழ்ந்ததில் 20 போ் உயிரிழந்தனா்; பலரைக் காணவில்லை.
கிரி நகரில் இருந்து தலைநகா் கின்ஷாசாவுக்கு சென்று கொண்டிருந்த படகு, போபெனி மற்றும் லோபெகே கிராமங்களுக்கு இடையே கவிழ்ந்தது. படகில் பயணித்தவா்களில் புதிதாக பொறுப்பேற்ற கத்தோலிக்க திருச்சபை மதகுருவும் ஒருவா் என்று ஊள்ளூா் ஊடகங்கள் கூறின.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
