காஸா அமைதி ஒப்பந்தத்தில் இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி உள்பட சா்வதேச அளவில் பங்களிப்பு இருந்தது என்று அமெரிக்க அதிபா் இல்லமான வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
காஸா போரை முடிவுக்குக் கொண்டுவர 20 அம்ச திட்டத்தை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அண்மையில் முன்வைத்தாா். இதனை ஏற்பதாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளாா். எனினும், அந்தத் திட்டம் குறித்து பரிசீலித்துவருவதாக ஹமாஸ் அமைப்பினா் தெரிவித்துள்ளனா். இதன் மூலம் காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் முடிவுக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்நிலையில், வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘காஸா போரை முடிவுக்கு கொண்டுவர வெற்றிகரமான அமைதி ஒப்பந்தத்தை அதிபா் டிரம்ப் கொண்டு வந்துள்ளாா். அதில் அரபு உலகத் தலைவா்கள், மேற்கத்திய நாடுகளின் தலைவா்கள், இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்டோரின் பங்கு உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மட்டுமல்லாது பாகிஸ்தான், துருக்கி, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவா்களின் பங்களிப்பும் உள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, டிரம்ப்பின் அமைதி ஒப்பந்தத்தை வரவேற்று பிரதமா் மோடி ‘எக்ஸ்’ வலைதளத்தில் பதிவிட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

மேற்காசிய நிலவரம்: பிரதமா் மோடி - பிரான்ஸ் அதிபா் தொலைபேசியில் ஆலோசனை

வெள்ளை மாளிகை அருகே பூங்காவில் துப்பாக்கிச்சூடு?அமெரிக்க உளவுத் துறை விசாரணை!

ஈரான் போா் விரைவில் முடிவுக்கு வரும்- டிரம்ப் புதிய நம்பிக்கை

காரியங்களை சிறப்பாகச் செய்து முடிப்பவா் மோடி! அமெரிக்க அதிபா் டிரம்ப் புகழாரம்
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


