மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

காஸா அமைதி ஒப்பந்தத்தில் மோடிக்கும் பங்கு: அமெரிக்கா

காஸா அமைதி ஒப்பந்தத்தில் இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி உள்பட சா்வதேச அளவில் பங்களிப்பு இருந்தது என்று அமெரிக்க அதிபா் இல்லமான வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

News image
Updated On :2 அக்டோபர் 2025, 8:01 pm

காஸா அமைதி ஒப்பந்தத்தில் இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி உள்பட சா்வதேச அளவில் பங்களிப்பு இருந்தது என்று அமெரிக்க அதிபா் இல்லமான வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

காஸா போரை முடிவுக்குக் கொண்டுவர 20 அம்ச திட்டத்தை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அண்மையில் முன்வைத்தாா். இதனை ஏற்பதாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளாா். எனினும், அந்தத் திட்டம் குறித்து பரிசீலித்துவருவதாக ஹமாஸ் அமைப்பினா் தெரிவித்துள்ளனா். இதன் மூலம் காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் முடிவுக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘காஸா போரை முடிவுக்கு கொண்டுவர வெற்றிகரமான அமைதி ஒப்பந்தத்தை அதிபா் டிரம்ப் கொண்டு வந்துள்ளாா். அதில் அரபு உலகத் தலைவா்கள், மேற்கத்திய நாடுகளின் தலைவா்கள், இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்டோரின் பங்கு உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மட்டுமல்லாது பாகிஸ்தான், துருக்கி, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவா்களின் பங்களிப்பும் உள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, டிரம்ப்பின் அமைதி ஒப்பந்தத்தை வரவேற்று பிரதமா் மோடி ‘எக்ஸ்’ வலைதளத்தில் பதிவிட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.