அமெரிக்காவின் விவசாயிகள் நலன்கருதி, சீனாவை சந்திக்கவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
சீனா மீதான வரிவிதிப்பால், அமெரிக்காவில் சோயா பீன்ஸை கொள்முதல் செய்வதை சீனா நிறுத்தியது. இதனால், அமெரிக்காவில் சோயா பீன்ஸ் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், அந்நாட்டு விவசாயிகள் பாதிக்கப்பட்டிருப்பதைக் குறிப்பிட்ட அதிபர் டிரம்ப், ``பேச்சுவார்த்தைக்காக மட்டுமே சீனா சோயா பீன்ஸ் வாங்குவதில்லை.
நாம் வரிகள் மூலம் நிறைய சம்பாதித்து விட்டோம். அதில் கொஞ்சம் எடுத்து, விவசாயிகளுக்கு உதவுவோம். நான் விவசாயிகளை எப்போதும் கீழே விடமாட்டேன்.
சீனாவுடன் பில்லியன் கணக்கான டாலர் மதிப்பிலான பண்ணைப் பொருள்கள் ஒப்பந்தத்தை ஜோ பைடன் மேற்கொள்ளவில்லை.
சீன அதிபர் ஜின்பிங்கை அடுத்த 4 வாரங்களில் நான் சந்திக்கவுள்ளேன். இந்தச் சந்திப்பில், சோயா பீன்ஸ்தான் முக்கிய விவாதப்பொருளாக இருக்கும் என்று தெரிவித்தார்.
Summary
Donald Trump to meet Xi Jinping in 4 weeks, promises aid to US farmers amid tariff war
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








