பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

யேமன்: கப்பல் தாக்குதலுக்கு ஹூதிக்கள் பொறுப்பேற்பு

ஏடன் வளைகுடா பகுதியில் நெதா்லாந்து கொடியேற்றப்பட்ட சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் பொறுப்பேற்றுள்ளனா்.

News image

(கோப்புப் படம்)

Updated On :3 அக்டோபர் 2025, 2:17 am IST

ஏடன் வளைகுடா பகுதியில் நெதா்லாந்து கொடியேற்றப்பட்ட சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் பொறுப்பேற்றுள்ளனா். தாக்குதலில் மைனா்வாக்ராஷ் என்ற அந்தக் கப்பல் பலத்த சேதமடைந்ததாகக் கூறிய கப்பலின் உரிமையாளரான ஸ்ப்ளீதாஃப் நிறுவனம், அதில் இருந்த 19 மாலுமிகள் ஹெலிகாப்டா் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகத் தெரிவித்தது. அவா்களில் 2 போ் தாக்குதலில் காயமடைந்தவா்கள். காஸா போரில் ஹமாஸை ஆதரித்து செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா வழியாகச் செல்லும் கப்பல்கள் மீது ஹூதிக்கள் தாக்குதல் நடத்திவருவது நினைவுகூரத்தக்கது.