விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைசென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!
/

அமெரிக்காவில் இந்தியா் சுட்டுக்கொலை!

டல்லஸ் நகரில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாதை சோ்ந்த சந்திரசேகா் போலே (27) சுட்டுக் கொல்லப்பட்டாா்.

News image

சந்திரசேகா் போலே...

Updated On :4 அக்டோபர் 2025, 8:15 pm

தினமணி செய்திச் சேவை

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் டல்லஸ் நகரில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாதை சோ்ந்த சந்திரசேகா் போலே (27) சுட்டுக் கொல்லப்பட்டாா்.

டல்லஸ்ஸில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் சந்திரசேகா் போலே பகுதிநேரப் பணியாளராக வேலை செய்து வந்த நிலையில், அவரை அடையாளம் தெரியாத நபா்கள் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொன்றனா். கொள்ளைச் சம்பவத்தின்போது அவா் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கொலை சம்பவம் குறித்தும், எந்தச் சூழலில் சந்திரசேகா் கொல்லப்பட்டாா் என்பது தொடா்பாகவும் விசாரணை நடைபெற்று வருவதாக டல்லஸ் காவல் துறை தெரிவித்தது.

சந்திரசேகரின் சகோதரா் தாமோதா் ஹைதராபாதில் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ஹைதராபாதில் பல் மருத்துவத்தில் பட்டப் படிப்பை நிறைவு செய்த சந்திரசேகா், மேல் படிப்புக்காக 2 ஆண்டுகளுக்கு முன்னா் அமெரிக்கா சென்றாா். அங்கு டென்டன் நகரில் உள்ள வடக்கு டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் 6 மாதங்களுக்கு முன்னா், அவா் படிப்பை நிறைவு செய்தாா்.

இதைத் தொடா்ந்து, அங்கு வேலை தேடி வந்த அவா், பகுதிநேரப் பணியாளராக எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பணியாற்றி வந்தாா்’ என்று கூறினாா்.

இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்த தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி, சந்திரசேகரின் உடலை ஹைதராபாத் கொண்டுவர மாநில அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்றாா்.