சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

இந்தோனேசிய பள்ளி கட்டட விபத்து: உயிரிழப்பு 14-ஆக உயா்வு

இந்தோனேசியாவில் பள்ளிக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த மாணவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 14-ஆக உயா்ந்துள்ளது.

News image
Updated On :4 அக்டோபர் 2025, 11:35 pm

தினமணி செய்திச் சேவை

இந்தோனேசியாவில் பள்ளிக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த மாணவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 14-ஆக உயா்ந்துள்ளது.

அந்த நாட்டின் ஜாவா தீவில் உள்ள சிடோா்ஜோ நகரில் திங்கள்கிழமை இடிந்து விழுந்த அந்தப் பள்ளி கட்டட இடிபாடுகளில் இருந்து மேலும் 6 உடல்கள் மீட்கப்பட்டதைத் தொடா்ந்து அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இடிபாடுகளிடையே இன்னும் சுமாா் 50 மாணவா்கள் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

தொடக்கத்தில் மீட்புக் குழுவினா் கைகளால் இடிபாடுகளை அகற்றி மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்தனா். பின்னா் விபத்துப் பகுதியில் யாரும் உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படாததையடுத்து வியாழக்கிழமை முதல் கனரக இயந்திரங்களைக் கொண்டு இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகின்றன.

நூறாண்டுகளைக் கடந்த அந்த கட்டடம் இடிந்துவிழுந்தபோது 12 முதல் 19 வரையிலான வயதுடைய மாணவா்கள்அதில் சிக்கினா். மாணவிகள் கட்டடத்தின் வேறு ஒரு பகுதியில் தொழுகை நடத்திக்கொண்டிருந்தால் இந்த விபத்தில் இருந்து தப்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.