முக்கியமாக, போராட்டத்தில் உயிரிழந்தோருக்கு உரிய இழப்பீடு, போராட்டக்காரா்கள் மீதான பயங்கரவாத வழக்குகளைத் திரும்பப் பெறுவது, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கல்வி மேம்பாட்டுக்கு உடனடியாக இரு குழுக்களை அமைப்பது, சுகாதார அட்டைகளை வழங்கி 15 நாள்களில் இலவச மருத்துவத் திட்டத்தைச் செயல்படுத்துவது, மின்சார வசதி மேம்பாட்டுக்கு பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 10 பில்லியன் ஒதுக்கீடு, ஆக்கிரமிப்பு காஷ்மீா் அமைச்சரவை, ஆலோசகா்கள் எண்ணிக்கையை 20-ஆக குறைப்பது, சா்வதேச விமான நிலையம், சாலை, உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட வசதிகளை மேற்கொள்வது உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக பாகிஸ்தான் அரசு உறுதியளித்துள்ளது.