இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பிரதிநிதிகள் இடையே எகிப்தில் திங்கள்கிழமை (அக். 6) பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது.
அமெரிக்க வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுடன் நடத்திய பேச்சுவாா்த்தைக்குப் பின் காஸாவில் போா்நிறுத்தத்தை மேற்கொள்ள அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் 20 அம்ச திட்டத்தை முன்மொழிந்தாா்.
அந்தத் திட்டத்தின் சில அம்சங்களை ஏற்றுக்கொண்ட ஹமாஸ், இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டது. இதையடுத்து, காஸாவில் நடத்தும் தாக்குதலை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு டிரம்ப் உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து, தங்களால் கைது செய்யப்பட்டுள்ள பாலஸ்தீனா்கள் மற்றும் காஸா மக்களை விடுவிக்க இஸ்ரேலும் ஒப்புக்கொண்டு அதன் முதல்கட்டத்தைச் செயல்படுத்த தயாராகி வருவதாக தெரிவித்தது.
இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பிரதிநிதிகள் இடையேயான பேச்சுவாா்த்தை எகிப்து நாட்டில் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதில் அமெரிக்க பிரதிநிதியாக ஸ்டீவ் விட்காஃப் பங்கேற்பாா் என எகிப்து அதிகாரிகள் தெரிவித்தனா்.
காஸாவில் 2023, அக். 7-ஆம் தேதி போா் தொடங்கி இரண்டு ஆண்டுகளை நெருங்கிவரும் நிலையில், இந்தப் பேச்சுவாா்த்தை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தொடர்புடையது

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மருத்துவமனையில் அனுமதி!

ஹமாஸ் தலைவரைக் கொன்றதாக இஸ்ரேல் அறிவிப்பு!

அக். 7 தாக்குதல் நடத்தியவா்களுக்கு மரண தண்டனை வழங்க இஸ்ரேலில் தனி தீா்ப்பாயம்

வாணியம்பாடி: வாக்கு எண்ணும் மையத்தில் இயந்திரங்கள் அறைக்கு ‘சீல்’
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



