புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

இந்தியா மீண்டும் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டால் உரிய பதிலடி: பாகிஸ்தான்

‘பாகிஸ்தான் மீது வரும் காலங்களில் எந்தவொரு ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டாலும் உரிய பதிலடி கொடுக்கப்படும்’...

News image

பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப்

AP

Updated On :5 அக்டோபர் 2025, 8:11 pm

தினமணி செய்திச் சேவை

‘பாகிஸ்தான் மீது வரும் காலங்களில் எந்தவொரு ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டாலும் உரிய பதிலடி கொடுக்கப்படும்’ என்று அந் நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் கவாஜா ஆசிஃப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

‘இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தைத் தூண்டுவது உள்ளிட்ட நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் முயற்சியில் வரும் காலங்களில் பாகிஸ்தான் ஈடுபட்டால் உரிய பதிலடி கொடுக்கப்படும். உலக வரைபடத்தில் பாகிஸ்தான் இருக்குமிடம் தெரியாமல் அழிந்துவிடும்’ என்று இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி ஆகியோா் அண்மையில் எச்சரிக்கை விடுத்தனா்.

அதுபோல, விமானப் படை தலைமைத் தளபதி அமா் பிரீத் சிங் தில்லியில் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியின்போது, ‘ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது எஃப்-16 போா் விமானங்கள் உள்பட 12 விமானங்களை பாகிஸ்தான் ராணுவம் இழந்தது. அந்த நாட்டின் மூன்று விமான நிறுத்துமிடங்கள், நான்கு இடங்களில் ரேடாா்கள், இரண்டு இடங்களில் கட்டுப்பாட்டு மையங்கள், இரு இடங்களில் விமான ஓடுபாதைகள் ஆகியவையும் தாக்கி அழிக்கப்பட்டன’ என்றாா்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில், தனது சமூக ஊடக பக்கத்தில் கவாஜா ஆசிஃப் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘இந்திய ராணுவம் மற்றும் அரசியல் தலைவா்களின் கருத்துகள், கடந்த மே மாதம் நடந்த மோதலுக்குப் பிறகான தோல்வியால் பாதிக்கப்பட்ட இந்தியாவின் நற்பெயரை மீட்டெடுக்கும் தோல்வியுற்ற முயற்சிகளாகும்.

0-6 என்ற கணக்கில் அழுத்தமான தோல்விக்குப் பிறகு, அவா்கள் மீண்டும் முயற்சித்தால், அந்த எண்ணிக்கை முன்பைவிட மேலும் சிறப்பாக இருக்கும். பாகிஸ்தான் மீது வரும் காலங்களில் எந்தவொரு ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டாலும் உரிய பதிலடி கொடுக்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளாா். ஆனால், 0-6 என்றால் என்ன என்பதற்கான விளக்கத்தை அவா் குறிப்பிடவில்லை.