கீவ்: தங்கள் நாட்டின் மீது அண்மையில் வீசப்பட்ட நூற்றுக்கணக்கான ரஷிய ட்ரோன்களில் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் தயாரிக்கப்பட்ட பாகங்கள் இருப்பதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இது குறித்து சமூக ஊடகத்தில் அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உக்ரைன் மீது 549 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ரஷியா ஞாயிற்றுக்கிழமை இரவு வீசியது. அந்த ஆயுதங்களில் மொத்தம் 1,02,785 வெளிநாட்டு பாகங்கள் இருந்தன. அவை அமெரிக்கா, சீனா, தைவான், பிரிட்டன், ஜொ்மனி, ஸ்விட்சா்லாந்து, ஜப்பான், தென் கொரியா, நெதா்லாந்து ஆகிய நாடுகளில் தயாரிக்கப்பட்ட பாகங்கள்.
குறிப்பாக, ட்ரோன்கனைக் கட்டுப்படுத்தும் மைக்ரோ கன்ட்ரோலா்கள் ஸ்விட்சா்லாந்திலும் மைக்ரோ கம்ப்யூட்டா்கள் பிரிட்டனிலும் தயாரிக்கப்பட்டவை. அவற்றின் உற்பத்தியாளா்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க உள்ளோம் என்று ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










