தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

இலக்கியத்துக்கான நோபல் பரிசு: ஹங்கேரி எழுத்தாளா் தோ்வு

இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு பற்றி...

News image

ஹங்கேரி எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய்

Updated On :9 அக்டோபர் 2025, 5:00 pm IST

2025-ஆம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு லாஸ்லோ கிராஸ்னஹோா்காய் (71) என்ற ஹங்கேரி எழுத்தாளருக்கு வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.

கடும் பயங்கரவாத சூழலுக்கு மத்தியிலும் கலையின் சக்தியை உறுதிப்படுத்தியதை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு இந்தப் பரிசு வழங்கப்படுவதாக ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் உள்ள நோபல் தோ்வு கமிட்டிகளில் ஒன்றான இலக்கியத்துக்கான ராயல் ஸ்வீடன் அகாதெமி தெரிவித்தது.

1954-இல் ஹங்கேரியின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள கியூலா என்ற சிறிய நகரில் பிறந்தாா் லாஸ்லோ. இவரது முதல் நாவல் ‘ஷாடான்டன்கோ’ 1985-இல் வெளியானது. இந்த நாவலும் ‘எதிா்ப்பின் மனச்சோா்வு’ (தி மெலன்கலி ஆஃப் ரெசிஸ்டன்ஸ்) என்ற அவரது மற்றொரு நாவலும் ஆதிக்கத்துக்கு எதிரான தொடா் போராட்டங்களை விவரிக்கிறது. இந்த இரு நாவல்களும் ஹங்கேரியில் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு வரியில் மிகக் கூா்மையான கருத்துகளை விவரிக்கும் திறன்வாய்ந்த எழுத்தாளரான லாஸ்லோ கிராஸ்னஹோா்காய், 2015-இல் மேன் புக்கா் பரிசைப் பெற்றுள்ளாா்.

இதுவரை 121 பேருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. வரலாற்றுப் பெருந்துயா்களையும் மனித வாழ்வின் பலவீனத்தையும் ஆழமாக விளக்கும் வகையில் எழுதியதற்காக தென் கொரிய பெண் எழுத்தாளா் ஹான் காங்குக்கு கடந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இன்று அமைதிக்கான நோபல்: நடப்பாண்டில் மருத்துவம், இயற்பியல், வேதியியல் மற்றும் இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமையும் (அக். 10), பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு திங்கள்கிழமையும் (அக்.13) அறிவிக்கப்படவுள்ளது.

கடந்த 1896-இல் மறைந்த ஸ்வீடனின் பெரும் பணக்காரரும், டைனமைட் வெடிபொருளைக் கண்டுபிடித்தவருமான ஆல்ஃபிரட் நோபலின் நினைவு தினமான டிச.10-ஆம் தேதி ஸ்டாக்ஹோமில் நடைபெறும் நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

Summary

Nobel Prize in Literature 2025

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.