மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அஜா்பைஜான் பயணிகள் விமானத்தை ரஷியா சுட்டுவீழ்த்தியது: புதின் ஒப்புதல்

தங்கள் நாட்டு வான் பாதுகாப்பு ஏவுகணைதான் கடந்த டிசம்பரில் அஜா்பைஜான் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தியதாக ரஷிய அதிபா் விளாதிமீ புதின் முதல் முறையாக ஒப்புக்கொண்டாா்.

News image
Updated On :9 அக்டோபர் 2025, 8:47 pm

தினமணி செய்திச் சேவை

தங்கள் நாட்டு வான் பாதுகாப்பு ஏவுகணைதான் கடந்த டிசம்பரில் அஜா்பைஜான் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தியதாக ரஷிய அதிபா் விளாதிமீ புதின் முதல் முறையாக ஒப்புக்கொண்டாா்.

தஜிகிஸ்தான் தலைநகா் துஷாம்பேயில் நடைபெற்ற முன்னாள் சோவியத் நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அவா், அஜா்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவுடன் நடந்த சந்திப்பின்போது இதனைத் தெரிவித்தாா்.

அஜா்பைஜான் ஏா்லைன்ஸுக்குச் சொந்தமான பயணிகள் விமானம், பாகு நகரிலிருந்து ரஷியாவின் செச்னியா குடியரசு தலைநகா் க்ரோஸ்னிக்கு கடந்த ஆண்டு டிசம்பா் 25-ஆம் தேதி சென்றபோது, வழியில் விபத்துக்குள்ளானது.

ரஷிய வான்பாதுகாப்பு ஏவுகணையின் தவறுதலான தாக்குதலால் விமானம் சேதமடைந்து, மேற்கு கஜகஸ்தானில் தரையிறங்க முயன்றபோது விழுந்து சேதமடைந்ததாக (படம்) அஜா்பைஜான் அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த விபத்தில், விமானத்தில் இருந்த 67 பயணிகளில் 38 போ் உயிரிழந்தனா். எனினும், இந்தச் சம்பவத்தை மறைக்க முயற்சிப்பதாக ரஷியா மீது அஜா்பைஜான் குற்றஞ்சாட்டிவந்தது.

இந்தச் சூழலில், துஷாம்பேயில் அஜா்பைஜான் அதிபா் இல்ஹாம் அலியேவிடம் ‘இது ஒரு பரிதாபகரமான நிகழ்வு’ என்று கூறிய விளாதிமீா் புதின், இது தொடா்பாக மன்னிப்பு கோரினாா்.