கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ஆப்கானிஸ்தான் எப்போதும் இந்தியா பக்கம் உள்ளது: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சா்

ஆப்கானிஸ்தான் எப்போதும் இந்தியா பக்கம் உள்ளது: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சா்

News image

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சா் கவாஜா ஆசிஃப்

Updated On :10 அக்டோபர் 2025, 9:04 pm

தினமணி செய்திச் சேவை

ஆப்கானிஸ்தான் எப்போதும் இந்தியாவின் பக்கமே இருந்து வருகிறது. பாகிஸ்தான் பல்வேறு வகைகளில் ஆப்கானிஸ்தானுக்கு உதவினாலும் அந்த நாடு மாறவில்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சா் கவாஜா ஆசிஃப் தெரிவித்தாா்.

ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சா் அமிா் கான் முத்தாகி இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் பாகிஸ்தான் தரப்பு இவ்வாறு கூறியுள்ளது.

பாகிஸ்தான் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவா் மேலும் கூறியுள்ளதாவது:

வரலாற்றுரீதியாகவும் நேற்று, இன்று, நாளை என எப்போதும் இந்தியாவின் பக்கமே ஆப்கானிஸ்தான் துணை நின்று வருகிறது. அதே நேரத்தில் நெருங்கிய அண்டை நாடான பாகிஸ்தானுடன் பகைமை பாராட்டுகிறது. இத்தனைக்கும் ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு பாகிஸ்தான் பல ஆண்டுகளாக உதவி வருகிறது.

அமெரிக்கா மீது விமா்சனம்: முந்தைய அரசுகள் அமெரிக்காவின் நெருக்கடிக்கு பயந்து ஆப்கானிஸ்தான் அகதிகளை பாகிஸ்தானுக்குள் அனுமதித்தது. இதற்காக பல தியாகங்களை பாகிஸ்தான் செய்தது. எனினும், ஆப்கானிஸ்தான் எங்களுக்கு ஆதரவாக இல்லை. பாகிஸ்தான் பெரிய மனதுடன் செய்த உதவிகளை ஆப்கானிஸ்தான் கருத்தில் கொள்ளவே இல்லை என்றாா்.

ஆப்கானிஸ்தானுக்கு எச்சரிக்கை: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இது தொடா்பாக பேசிய அமைச்சா் கவாஜா, ‘பாகிஸ்தானின் பொறுமைக்கு ஓா் எல்லை உண்டு. ஆப்கானிஸ்தானில் இருந்து தூண்டிவிடப்படும் பயங்கரவாதத்தை இனிமேலும் சகித்துக் கொள்ள முடியாது. ஏனெனில், இதே நிலை தொடா்ந்தால் பாகிஸ்தானையும் பயங்கரவாத ஆதரவு நாடாகவே சா்வதேச நாடுகள் கருதத் தொடங்கும்.

எல்லையில் பயங்கரவாதிகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் நடவடிக்கை எடுக்காவிட்டால், பாகிஸ்தான் கடும் நடவடிக்கை மேற்கொள்ளும்’ என்றாா்.