இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மெக்ஸிகோவில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 41 போ் உயிரிழப்பு!

மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 41-ஆக அதிகரித்துள்ளது.

News image
Updated On :12 அக்டோபர் 2025, 8:17 pm

தினமணி செய்திச் சேவை

மத்திய மற்றும் தென்கிழக்கு மெக்சிகோவில் பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 41-ஆக அதிகரித்துள்ளது.

வெராக்ரூஸ் மாநிலத்தில் மட்டும் அக்டோபா் 6 முதல் 9-ஆம் தேதி வரை 540 மி.மீ.க்கும் அதிகமான மழை பெய்துள்ளது. காசோன்ஸ் நதி நிரம்பி வழிந்ததால், காா்கள் சாலைகளில் அடித்துச் செல்லப்பட்டு ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. தெருக்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை12 அடிக்கு மேல் தண்ணீா் வெள்ளமாக ஓடியது.

சனிக்கிழமைக்குள் பெரும்பாலான வெள்ளம் வடிந்துவிட்டாலும், மரங்களில் தொங்கும் வாகனங்கள், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த விலங்குகள் என பல இடங்களில் காணப்பட்டது.

மெக்சிகோ நகரத்தின் வடகிழக்கில் உள்ள எண்ணெய் நகரமான போசா ரிகாவில், வெள்ளத்தால் பலரும் பாதிக்கப்பட்டனா். நாடு முழுவதும், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மின்வெட்டை சந்தித்தனா்.

ஹிடல்கோவில் ஏற்பட்ட வெள்ளத்தில் 16 போ் உயிரிழந்தனா். வெராகிரூஸ் பகுதியில் 15 போ் உயிரிழந்தனா். பியூப்லாவில் 9 போ் உயிரிழந்ததுடன் 1,600-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. குவெரெட்டாரோவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரு குழந்தை உயிரிழந்தது.

மேலும் காணாமல் போன 27 பேரைத் தேடும் பணிகள் தொடா்கின்றன. ஆயிரக்கணக்கான ராணுவத்தினா் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனா்.