எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

பிணைக் கைதிகள் 7 பேரை விடுவித்த ஹமாஸ்! இஸ்ரேலில் டிரம்ப்!!

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் நிறுத்தம் பற்றி...

News image

இஸ்ரேலில் காத்திருக்கும் பிணைக் கைதி ஒருவரின் குடும்பத்தினர்... - AP

Updated On :13 அக்டோபர் 2025, 12:55 pm IST

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக உள்ள நிலையில் ஹமாஸ் வசம் உள்ள 7 பிணைக் கைதிகள் இன்று(அக். 13) விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போர் 2 ஆண்டுகளைக் கடந்த நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தம் எகிப்தில் இன்று நடைபெறும் உச்சி மாநாட்டில் கையழுத்தாகவுள்ளது. அமெரிக்க அதிபா் டிரம்ப், எகிப்து அதிபா் அப்தல் ஃபத்தா அல்-சிசி ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் உள்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கவுள்ளனா். ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸும் கலந்து கொள்கிறாா்.

2 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் குண்டுகள் சத்தம் இல்லாமல் மக்கள் இருக்கின்றனர். காஸா மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் மீண்டும் தங்கள் பகுதிகளுக்குத் திரும்பி வருகின்றனர். ஆனால் காஸாவில் தற்போது மக்கள் வாழ்வதற்கான சூழல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஹமாஸ் வசம் உயிருடன் உள்ள 20 பிணைக் கைதிகளில் முதலாவதாக 7 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். முதல் 7 பேரையும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அமைப்பிடம் ஹமாஸ் ஒப்படைத்தது.

தொடர்ந்து இஸ்ரேலுக்கு வந்த 7 பேருக்கும் இஸ்ரேல் அரசு சார்பிலும் அவர்களது குடும்பத்தினர் சார்பிலும் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இறந்தவர்களின் உடலையும் ஹமாஸ் ஒப்படைக்கும் என்று இஸ்ரேல் தகவல் தெரிவித்துள்ளது.

அவர்கள் அனைவரும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதற்கு பதிலாக இஸ்ரேல் வசம் உள்ள 1,900க்கும் மேற்பட்ட பாலஸ்தீன கைதிகள் விடுக்கப்பட உள்ளனர்.

இஸ்ரேல் - காஸா இடையேயான ஒப்பந்த கையெழுத்தாவதையொட்டி அமெரிக்க அதிபர் டிரம்ப் இஸ்ரேலுக்கு வருகை தந்துள்ளார். தொடர்ந்து இஸ்ரேல் அதிபருடன் அவர் எகிப்து செல்கிறார்.

Summary

Gaza ceasefire: Israel welcomes 7 hostages freed by Hamas

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.