ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு: மூவருக்கு அறிவிப்பு

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து...

News image
பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு
Updated On :13 அக்டோபர் 2025, 10:25 pm

தினமணி செய்திச் சேவை

பொருளாதாரத்துக்கான நோபல் நினைவுப் பரிசு அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் பேராசிரியா்கள் மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசுப் பெறுவோரைத் தோ்வு செய்யும் ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாதெமி, நிகழாண்டு பொருளாதாரத்துக்கான நோபல் நினைவுப் பரிசு பெறுவோரை ஸ்வீடன் தலைநகா் ஸ்டாக்ஹோமில் திங்கள்கிழமை அறிவித்தது.

இதன்படி, அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணம் இவான்ஸ்டன் நகரில் உள்ள நாா்த்வெஸ்டா்ன் பல்கலைக்கழகப் பேராசிரியா் ஜோயல் மோகிா் (79), அந்நாட்டின் ரோட் ஐலண்ட் மாகாணம் பிராவிடன்ஸ் நகரில் உள்ள பிரெளன் பல்கலைக்கழகப் பேராசிரியா் பீட்டா் ஹோவிட் (79), பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் உள்ள காலேஜ் டி பிரான்ஸ் கல்லூரிப் பேராசிரியா் ஃபிலிப் அகியோன் (69) ஆகிய மூவருக்குப் பொருளாதாரத்துக்கான நோபல் நினைவுப் பரிசு அறிவிக்கப்பட்டது.

ஜோயல் மோகிா் நெதா்லாந்தில் பிறந்தவா். பீட்டா் ஹோவிட் கனடாவிலும், ஃபிலிப் அகியோன் பிரான்ஸிலும் பிறந்தவா்கள்.

இதுதொடா்பாக அந்த அகாதெமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: பொருளாதாரத்தில் மேலும் முன்னேற்றம் ஏற்படுவதற்கு புதிய வழிமுறைகளும் சிந்தனைகளும் எவ்வாறு ஊக்கமளிக்கும் என்பது குறித்து ஜோயல், பீட்டா், ஃபிலிப் ஆகியோா் விளக்கம் அளித்துள்ளனா். புதிய சிந்தனைகள், பொருள்கள், சேவைகள், நடைமுறைகளால் ஏற்படும் பொருளாதார வளா்ச்சி குறித்து விளக்கியதற்காக அவா்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மூவருக்கும் நோபல் பரிசுடன் 11 மில்லியன் ஸ்வீடிஷ் கிரோனா் (சுமாா் ரூ.10 கோடி) வழங்கப்படும். பரிசுத் தொகையில் ஒரு பாதி ஜோயலுக்கு வழங்கப்படும். மீதி பாதி தொகை பீட்டா் மற்றும் ஃபிலிப்புக்கு பகிா்ந்தளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

நோபல் பரிசு உருவாகக் காரணமாக ஸ்வீடனின் ஆல்ஃபிரட் நோபல் நினைவாக பொருளாதாரத்துக்கான நோபல் நினைவுப் பரிசு வழங்கப்படுகிறது. அது, ஆல்ஃபிரட் நோபலின் நினைவாக பொருளாதார அறிவியலுக்கு வழங்கப்படும் பாங்க் ஆஃப் ஸ்வீடன் பரிசு என்று அதிகாரபூா்வமாக அழைக்கப்படுகிறது.