
11-ஆவது முறையாக விண்ணில் ஏவி சோதிக்கப்பட்ட ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட ஸ்டார்ஷிப் ராக்கெட் வெற்றிகரமாக தனது பணிகளை நிறைவேற்றியது.
டெக்ஸாஸில் உள்ள ஸ்பேஸ்-எக்ஸின் ஸ்டார்பேஸ் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட அந்த ராக்கெட், பூமியைச் சுற்றிவந்து முன்பைப் போலவே போலியான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது. பின்னர் அது மீண்டும் பூமிக்குத் திரும்பி ஏவுதளத்தில் தரையிறங்கியது.
123 மீட்டர் உயரம் கொண்ட உலகின் மிகப் பெரிய மற்றும் சக்திவாய்ந்த இந்த ராக்கெட் மூலம் இன்னும் சில ஆண்டுகளில் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப நாசா விண்வெளி ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.