
தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் அதிபர் ஆண்ட்ரி ரஜோலினாவின் அரசைக் கவிழ்த்துவிட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
இந்த ஆட்சிக் கவிழ்ப்பை வழிநடத்திய தளபதி மைக்கேல் ராண்ட்ரியானிரினா, புதிய அதிபராகப் பொறுப்பேற்கவிருப்பதாக புதன்கிழமை அறிவித்தார்.
இளைஞர்களின் தீவிர போராட்டங்களைத் தொடர்ந்து ஆண்ட்ரி ரஜோலினாவை அதிபர் பதவியில் இருந்து அகற்றிய ராண்ட்ரியானிரினா, இன்னும் சில நாள்களில் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜோலினா நாட்டை விட்டு தப்பியுள்ளார்.
1960-இல் பிரான்ஸிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின், மடகாஸ்கர் பல ஆட்சிக் கவிழ்ப்புகளைச் சந்தித்துள்ளது நினைவுகூரத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.