ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்குப் பகுதியில், இன்று (அக். 17) ஒரே நாளில் 2 ஆவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின், கந்துட் மாகாணத்தில் இருந்து 47 கி.மீ. தூரத்தில், இன்று மாலை 5.45 மணியளவில் நிலப்பரப்பில் இருந்து 43 கி.மீ. ஆழத்தில்; 2 ஆவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ரிக்டர் அளவில் 5.5 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருள் சேதங்கள் குறித்த தகவல்கள் இதுவரையில் வெளியாகவில்லை.
முன்னதாக, ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் இன்று காலை 5.23 மணியளவில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக, தேசிய நிலஅதிர்வு ஆராய்ச்சி நிலையம் அறிவித்திருந்தது.
ஆப்கானிஸ்தானில், கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி ஏற்பட்ட 6.0 அளவிலான நிலநடுக்கத்தில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் பலியானது குறிப்பிடத்தக்கது.
Summary
An earthquake has been reported in northern Afghanistan today, the second in a single day.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








