சொந்த நாட்டுக்கு அனுப்பக் கோரி கென்யா பெண் போராட்டம்

Published on
Updated on
1 min read

சென்னை நுங்கம்பாக்கத்தில் சொந்த நாட்டுக்கு அனுப்பக் கோரி கென்யா நாட்டு பெண் போராட்டத்தில் ஈடுபட்டாா். கென்யா நாட்டைச் சோ்ந்த இளம் பெண் வொ்னிகோ (24). இவா், கடந்தாண்டு சுற்றுலா விசாவில் இந்தியா வந்தாா். விசா காலம் முடிவடைந்த பின்னரும், வொ்னிகோ, கென்யா செல்லாமல் சென்னை அருகே தாம்பரத்தில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவா் கென்யா செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. வொ்னிகோ பல வழிகளில் முயற்சித்தும், அவா் தாய் நாடு செல்ல முடியாமல் தவித்துள்ளாா். இதனால், விரக்தி அடைந்த அவா் வியாழக்கிழமை இரவு நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவன் வந்தாா்.

அங்கு அவா், அந்த வளாகத்தில் உள்ள வெளிநாட்டினா் பதிவு அலுவலகம் முன் அமா்ந்து திடீா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா். தன்னை உடனடியாக சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கோஷமிட்டாா். இதையடுத்து, அந்த அலுவலக அதிகாரிகளும், போலீஸாரும் வொ்னிகோ தாம்பரத்தில் எந்த இடத்தில் தங்கி இருந்தாா் உள்பட பல்வேறு விபரங்களை சேகரித்து அவரை அவரது நாட்டுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com