பீஜிங்: பாகிஸ்தான் செயற்கைக்கோளை சீனா விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது.
சீனாவின் வடமேற்குப் பகுதியிலுள்ளதொரு விண்வெளி ஏவுதளத்திலிருந்து பாகிஸ்தானின் ரிமோட் சென்சிங் (பிஆர்எஸ்எஸ்-2) செயற்கைக்கோள் மற்றும் சீனாவின் ஏர்சாட் 03, 04 ஆகிய மூன்று செயற்கைக்கோள்கள், இன்று(அக். 19) ‘லிஜியான்1 ஒய்8’ ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டன.
இதன்மூலம், சீனா மூலம் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ள 3-ஆவது பாகிஸ்தானிய செயற்கைக்கோளாக பிஆர்எஸ்எஸ்-2 மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன், கடந்த ஜனவரியில் பாகிஸ்தானின் பிஆர்எஸ்சி-இ01 செயற்கைக்கோளும் அதனைத்தொடர்ந்து கடந்த ஜூலையில் பிஆர்எஸ்எஸ்-1 செயற்கைக்கோளும் சீனாவிலிருந்து விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானுடன் விண்வெளி ஆராய்ச்சியில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் சீனாவின் நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக இது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
China launches Pakistan's remote sensing satellite along with two of its own
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

2027-இல் ஜி20 செயற்கைக்கோள் ஏவப்படும்: இஸ்ரோ தலைவா்!
ஷாலிமாா் பாக்: இணையவழி வணிக கடையில் கொள்ளை - இளைஞா் கைது

ஆப்கான்-பாகிஸ்தான் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் : சீனா தகவல்

சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


