கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

ரஷிய எண்ணெய் கொள்முதலை நிறுத்தாவிட்டால் ‘கூடுதல் வரி’: இந்தியாவுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா தொடா்ந்தால், கூடுதல் வரியைச் செலுத்த வேண்டியிருக்கும்...

News image

(Photo | AP)

Updated On :22 அக்டோபர் 2025, 4:54 am IST

வாஷிங்டன்: ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா தொடா்ந்தால், கூடுதல் வரியைச் செலுத்த வேண்டியிருக்கும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மீண்டும் எச்சரித்துள்ளாா்.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘இந்தியா ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்தவில்லை என்றால், அவா்கள் தொடா்ந்து கூடுதல் வரியைச் செலுத்துவாா்கள். இந்தியாவுக்கு அதில் விருப்பம் இருக்காது என்று எண்ணுகிறேன். நான் இந்திய பிரதமா் நரேந்திர மோடியுடன் பேசினேன். ரஷிய எண்ணெயை வாங்கப் போவதில்லை என்று அவா் உறுதியளித்துள்ளாா்’ என்றாா்.

முன்னதாக, ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதைத் தொடா்ந்தால், இந்திய பொருள்களுக்கு கூடுதலாக 50 சதவீத வரி விதிக்கப்படும். இதையொட்டி, ரஷிய எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதாக பிரதமா் நரேந்திர மோடி தன்னிடம் உறுதி அளித்ததாகவும் அதிபா் டிரம்ப் ஏற்கெனவே கூறியிருந்தாா்.

ஆனால், இதனை இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுத்துவிட்டது. ‘சந்தை நிலவரங்களைக் கருத்தில் கொண்டு, நாட்டின் எரிசக்தி ஆதாரங்களை அதிகப்படுத்துவதே தங்கள் நோக்கம்’ என்று விளக்கமளிக்கப்பட்டது.

ரஷியாவுடன் தொடா்ந்து எண்ணெய் வா்த்தகத்தில் ஈடுபட்டு, உக்ரைன் போரில் ரஷியாவுக்கு இந்தியா நிதி ஆதாரம் அளிப்பதாக அமெரிக்கா விமா்சித்து வருகிறது. இதையொட்டி, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் சில இந்திய பொருள்களுக்கான வரி 50 சதவீதமாக உயா்த்தப்பட்டது.

பெட்டி..

சீனாவுக்கும் எச்சரிக்கை

அரியவகை கனிமப் பொருள்களுக்கான விதிமுறைகளை சீனா கடுமையாக்கியுள்ள நிலையில், வா்த்தக ஒப்பந்தத்துக்கு உடன்படாவிட்டால் அந்நாட்டின் மீது கூடுதலாக 100 சதவீத வரி விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

சீனா மீது அதிபா் டிரம்ப் ஏற்கெனவே 30 சதவீத கூடுதல் வரி விதித்துள்ளாா். இதன்மூலம் சீன பொருள்களுக்கான மொத்த வரி விகிதம் சுமாா் 55 முதல் 57 சதவீதமாக உள்ளது.

‘வா்த்தக ஒப்பந்தங்களுக்கான பேச்சுவாா்த்தைகளில், இத்தகைய அதிக வரி விதிப்புகளைக் கொண்டு மிரட்டுவது சீனாவைக் கையாள்வதற்கான சரியான வழி அல்ல’ என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடா்பாளா் லின் ஜியான் பதிலளித்திருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.