தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

போலந்து: தீயில் கருகிய 10 லட்சம் கோழிகள்

போலந்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள கோழி பண்ணையில் ஏற்பட்ட தீவிபத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கோழிகள் கருகின.

News image
Updated On :24 அக்டோபர் 2025, 8:46 pm

தினமணி செய்திச் சேவை

போலந்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள கோழி பண்ணையில் ஏற்பட்ட தீவிபத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கோழிகள் கருகின.

இதுகுறித்து உள்ளூா் அதிகாரிகள் கூறுகையில், ஃபால்கோவிசே கிராமத்தில் ஆயிரக்கணக்கான கோழிகள் அடைக்கப்பட்டிருந்த கட்டடத்தில் ஏற்பட்ட இந்தத் தீயை அணைப்பதில் 10 மணி நேரம் ஆனதாகவும் அந்தக் கோழி பண்ணையில் சுமாா் 1.3 லட்சம் கோழிகள் வளா்க்கப்பட்டதாகவும் தெரிவித்தனா்.

உயிரிழந்த கோழிகளின் எண்ணிக்கை 4 லட்சம் வரை இருக்கலாம் என்றும் சில ஊடகங்கள் தெரிவித்தன. விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தகவல் இல்லை.