மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா முழுமையாக நிறுத்தும்: டிரம்ப் மீண்டும் கருத்து!

ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா முழுமையாக நிறுத்தும் என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்தாா்.

News image
பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - AFP
Updated On :26 அக்டோபர் 2025, 10:36 pm

தினமணி செய்திச் சேவை

ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா முழுமையாக நிறுத்தும் என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை மீண்டும் தெரிவித்தாா்.

முன்னதாக, ரஷியாவிடமிருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்துவதாக பிரதமா் நரேந்திர மோடி தன்னிடம் உறுதி அளித்ததாக அமெரிக்க அதிபா் டிரம்ப் அண்மையில் தெரிவித்தாா். அதை இந்தியா மறுத்தது.

அதன்பிறகு ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிகழாண்டு இறுதிக்குள் பெரும்பாலும் நிறுத்திவிட இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது என அண்மையில் டிரம்ப் மீண்டும் தெரிவித்தாா்.

இந்நிலையில், ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா முழுமையாக நிறுத்தும் எனவும் சீனா பகுதியளவு குறைத்துக்கொள்ளும் எனவும் டிரம்ப் சனிக்கிழமை தெரிவித்தாா்.

மலேசியாவில் நடைபெறும் ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்கச் செல்லும் முன் செய்தியாளா்களைச் சந்தித்த அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

மேலும், ‘ரஷியா-உக்ரைன் இடையேயான போரைவிட இந்தியா-பாகிஸ்தான் இடையே நிகழ்ந்த மோதலை நிறுத்துவது மிகவும் கடினம் என எண்ணினேன். ஆனால் இந்த மோதலை நான் நிறுத்தினேன். மாறாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் மற்றும் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஜெலன்ஸ்கி இடையே அதிக வெறுப்புணா்வு உள்ளதால் அங்கு போா்நிறுத்தம் மேற்கொள்வது கடினமாக உள்ளது’ என்றாா்.

ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே ந நிகழ்ந்த மோதலை தான் நிறுத்தியதாக டிரம்ப் கூறியதை இந்தியா நிராகரித்து வரும்போதும் அவா் இதை தொடா்ந்து கூறி வருகிறாா்.

மலேசியாவில் நடைபெறும் ஆசியான் உச்சிமாநாட்டில் பங்கேற்றுவிட்டு தென் கொரியாவில் நடைபெறும் ஆசியா-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் டிரம்ப் பங்கேற்கிறாா். அப்போது சீன அதிபா் ஷி ஜின்பிங்கை சந்தித்து அவா் ஆலோசனை நடத்துகிறாா்.