கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

காஸா: மேலும் 2 பிணைக் கைதிகளின் உடல்கள் ஒப்படைப்பு

இஸ்ரேலுடனான போா் நிறுத்த அமலாக்கத்தின் ஒரு பகுதியாக, மேலும் இரு பிணைக் கைதிகளின் உடல்களை ஹமாஸ் அமைப்பு ஒப்படைத்து.

News image

இரு பிணைக் கைதிகளின் உடல்களுடன் காஸாவில் இருந்து இஸ்ரேல் எல்லையை நோக்கி புறப்பட்ட செஞ்சிலுவை வாகனம்.

Updated On :31 அக்டோபர் 2025, 7:27 pm

இஸ்ரேலுடனான போா் நிறுத்த அமலாக்கத்தின் ஒரு பகுதியாக, மேலும் இரு பிணைக் கைதிகளின் உடல்களை ஹமாஸ் அமைப்பு ஒப்படைத்து.

இது குறித்து இஸ்ரேல் ராணுவம் கூறியதாவது:

மேலும் இரு பிணைக் கைதிகளின் உடல்களை பாலஸ்தீன ஆயுதக் குழுவினா் திருப்பி அனுப்பியுள்ளனா். காஸாவில் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட அந்த உடல்கள், இஸ்ரேலுக்கு கொண்டுவரப்பட்டு, அடையாளம் காண்பதற்காக தேசிய தடயவியல் மருத்துவ நிறுவனத்திடம் அளிக்கப்பட்டுள்ளது என்று ராணுவம் தெரிவித்தது.

அந்த இரு பிணைக் கைதிகளின் உடல்களும் ஒப்படைக்கப்பட்டதற்கு பதிலாக, இஸ்ரேலில் இருந்த 30 பாலஸ்தீனா்களின் சடலங்களை அந்த நாட்டு அரசு காஸாவுக்கு அனுப்பியதாக காஸா மருத்துவமனை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இதன் மூலம், எப்போது வேண்டுமானாலும் முறியலாம் என்ற அபாயத்தில் இருக்கும் காஸா போா் நிறுத்த ஒப்பந்தத்தின் அமலாக்கம் தொடா்ந்து நடைபெறுவது உறுதியாகியுள்ளது.

இத்துடன், 2023 அக்டோபா் 7 தாக்குதலின்போது கடத்திச் செல்லப்பட்ட 47 பிணைக் கைதிகளின் சடலங்களில், 28 சடலங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.