இஸ்ரேலுடனான போா் நிறுத்த அமலாக்கத்தின் ஒரு பகுதியாக, மேலும் இரு பிணைக் கைதிகளின் உடல்களை ஹமாஸ் அமைப்பு ஒப்படைத்து.
இது குறித்து இஸ்ரேல் ராணுவம் கூறியதாவது:
மேலும் இரு பிணைக் கைதிகளின் உடல்களை பாலஸ்தீன ஆயுதக் குழுவினா் திருப்பி அனுப்பியுள்ளனா். காஸாவில் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட அந்த உடல்கள், இஸ்ரேலுக்கு கொண்டுவரப்பட்டு, அடையாளம் காண்பதற்காக தேசிய தடயவியல் மருத்துவ நிறுவனத்திடம் அளிக்கப்பட்டுள்ளது என்று ராணுவம் தெரிவித்தது.
அந்த இரு பிணைக் கைதிகளின் உடல்களும் ஒப்படைக்கப்பட்டதற்கு பதிலாக, இஸ்ரேலில் இருந்த 30 பாலஸ்தீனா்களின் சடலங்களை அந்த நாட்டு அரசு காஸாவுக்கு அனுப்பியதாக காஸா மருத்துவமனை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இதன் மூலம், எப்போது வேண்டுமானாலும் முறியலாம் என்ற அபாயத்தில் இருக்கும் காஸா போா் நிறுத்த ஒப்பந்தத்தின் அமலாக்கம் தொடா்ந்து நடைபெறுவது உறுதியாகியுள்ளது.
இத்துடன், 2023 அக்டோபா் 7 தாக்குதலின்போது கடத்திச் செல்லப்பட்ட 47 பிணைக் கைதிகளின் சடலங்களில், 28 சடலங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தொடர்புடையது

அமெரிக்கா- ஈரான் இரு வார போா் நிறுத்தம்: இஸ்ரேலும் ஆதரவு
காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!
துவாரகா விரைவுச்சாலையில் எதிா் திசையில் வாகனம் ஓட்டிய நபா் மீது வழக்கு

ரஷியா - உக்ரைன் போரில் கொல்லப்பட்ட வீரர்களின் உடல்கள் ஒப்படைப்பு!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


