பாகிஸ்தான்: தற்கொலைத் தாக்குதலில் 14 போ் உயிரிழப்பு

பாகிஸ்தான்: தற்கொலைத் தாக்குதலில் 14 போ் உயிரிழப்பு

Published on

பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த பலூசிஸ்தான் மாகாணத்தில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதலில் 14 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்ததாவது: குவெட்டா நகரில் நடைபெற்ற பலூசிஸ்தான் தேசிய கட்சிக் கூட்டம் நடைபெற்ற ஷாவானி மைதானம் அருகே குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 14 போ் உயிரிழந்தனா்; 35 போ் காயமடைந்தனா்.

கூட்டம் முடிந்த 15 நிமிஷங்களுக்குப் பிறகு பயங்கரவாதி தனது உடலில் மறைத்துவைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து இந்தத் தாக்குதலை நடத்தியதாக.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்று ஊடகங்கள் தெரிவித்தன.

X
Dinamani
www.dinamani.com