அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அமெரிக்காவில் முதலீடு செய்ய டிரம்ப் வலியுறுத்தலா? அச்சுறுத்தலா?

அமெரிக்காவில் முதலீடு குறித்து தொழில்நுட்ப நிறுவனங்களுடன் அதிபர் டிரம்ப் கலந்துரையாடல்

News image
மார்க் ஸூக்கர்பெர்க் - டிரம்ப்- AP
Updated On :5 செப்டம்பர் 2025, 6:40 am

இணையதளச் செய்திப் பிரிவு

அமெரிக்காவில் தொழில்நுட்ப நிறுவனங்களின் முதலீடு குறித்து அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் கேட்டறிந்தார்.

அமெரிக்காவின் வெள்ளைமாளிகையில் நடைபெற்ற இரவு விருந்தில் அமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலானியா டிரம்ப் உள்பட முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் சுந்தர் பிச்சை (கூகுள்), சத்யா நாதெல்லா (மைக்ரோசாஃப்ட்), மார்க் ஸூக்கர்பெர்க் (மெட்டா), சாம் ஆல்ட்மேன் (ஓபன்ஏஐ), டிம் குக் (ஆப்பிள்) ஆகியோருடன் அதிபர் டிரம்ப் கலந்துரையாடினார். இந்த விருந்தின்போது, அமெரிக்காவில் அந்நிறுவனங்களின் முதலீடு குறித்து டிரம்ப் கேள்வி எழுப்பினார்.

ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கிடம், நீங்கள் எவ்வளவு முதலீடு செய்யவுள்ளீர்கள்? அது ஒரு பெரிய தொகை என்று எனக்கு தெரியும் என்று டிரம்ப் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த டிம் குக், அமெரிக்காவில் 600 பில்லியன் டாலர் முதலீடு செய்யவுள்ளதாகக் கூறினார். மேலும், அமெரிக்காவில் ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு வழிவகுத்ததற்காக டிரம்ப்புக்கு நன்றியும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸூக்கர்பெர்க்கிடம் முதலீடு குறித்து டிரம்ப் கேள்வி எழுப்பினார். மெட்டாவும் 600 பில்லியன் டாலர் முதலீடு செய்யவிருப்பதாகக் கூறினார்.

இரவு விருந்தில் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் டிரம்ப்

இரவு விருந்தில் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் டிரம்ப்

கூகுள் முதலீடு குறித்து பதிலளித்த சுந்தர் பிச்சை, வடக்குப் பகுதிகளில் 100 பில்லியன் டாலர் செய்கிறோம். அமெரிக்காவில் அடுத்த 2 ஆண்டுகளில் 250 பில்லியன் டாலர் முதலீடு செய்யவுள்ளோம் என்று தெரிவித்தார்.

மைக்ரோசாஃப்ட்டின் முதலீடு 75 பில்லியன் முதல் 80 பில்லியன் டாலர் என்று அந்நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா கூறினார்.

அமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன், வெளிநாடுகளில் அமெரிக்க நிறுவனங்கள் உற்பத்தி செய்து, அவற்றை அமெரிக்காவில் விற்பனை செய்வதை ஏற்க முடியாது என்று அதிருப்தியுடன் எதிர்ப்பும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் உற்பத்தி செய்து, அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்கள் மீது 25 சதவிகித வரியையும் கடந்த மே மாதம் அறிவித்தார்.

இந்த நிலையில்தான், நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் டிரம்ப் கலந்துரையாடியுள்ளார்.

summary

US President Trump hosts tech titans, asks Apple CEO to invest in US

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.