மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சியே நம் இலக்கு: அண்ணாமலைதவெக அரசு இந்த ஆண்டு ரூ. 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது : அண்ணாமலைவீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

பெண்களை தொடக்கூடாது.. தலிபான்களின் உத்தரவால் துயரம்

நிலநடுக்கத்தில் சிக்கித் தவித்து வரும் பெண்களை தொடக்கூடாது என்ற தலிபான்களின் உத்தரவால் துயரம் தொடர்கிறது.

News image

ஆப்கானிஸ்தானில்..

Updated On :6 செப்டம்பர் 2025, 9:25 am IST

நிலநடுக்கத்தை விடவும் கொடிய தலிபான் அரசின் அடக்குமுறையால், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கித் தவிக்கும் பெண்களை தூக்க உதவியின்றி அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஆப்கன் பெண்கள்.

இடிபாடுகளில் சிக்கி உயிருடன் தவித்துக் கொண்டிருக்கும் பெண்களைப் பார்த்ததும், அங்கிருக்கும் மீட்புப் பணியாளர்கள் ஓடிச் சென்று பார்க்க முடியுமே தவிர அவர்களை வெளியே தூக்கிவர முடியாது. காரணம். தலிபான்கள் அரசின் உத்தரவு, அதாவது, அந்த பெண்களுக்கு சம்பந்தமுள்ள ஆண்கள் மட்டுமே அவர்களைத் தொட்டுத் தூக்க வேண்டும். இல்லையென்றால், வேறு யாரும் பெண்களை தொட்டுத் தூக்கக் கூடாது என்பதே அந்த உத்தரவு. ஆண் துணை இல்லாத பல குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும் பெண் குழந்தைகளின் நிலையையும் நினைத்து பலரும் கலங்கி நிற்கிறார்கள்.

பல நூற்றாண்டுகள் முந்தைய கலாசாரத்தை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு ஆப்கனை ஆளும் தலிபான்களின் இந்த உத்தரவால், இடிபாடுகளுக்குள் பல பெண்கள் உயிரோடு சமாதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி வந்ததுமே பெண்களுக்கு எதிரான பல கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுவிட்டன. அங்கு பல குடும்பங்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியான நிலையில், ஒரு சில நாள்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானை தாக்கிய நிலநடுக்கத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் பலியாகினர்.

இந்த நிலையில், பெண்களை அவர்களது உறவினர்களான தந்தை, சகோரதரன், கணவர், மகன் மட்டுமே தொட வேண்டும் என்றும், மற்ற ஆண்கள் யாரும் தொடக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

இதில்லாமல், ஆப்கானிஸ்தானில் பெண்கள் யாரும் மீட்புப் பணியிலும் ஈடுபட முடியாது. இப்படியிருக்க, நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்பதும், காயமடைந்த பெண்கள் மருத்துவமனைக்கு வருவதும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருப்பது தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.