காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஹூண்டாய் ரெய்டு: அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்துங்கள்! - டிரம்ப்

ஹூண்டாய் நிறுவன ரெய்டு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவு பற்றி...

News image
அமெரிக்க அதிபர் டிரம்ப் ப- AP
Updated On :8 செப்டம்பர் 2025, 10:44 am

இணையதளச் செய்திப் பிரிவு

அமெரிக்​கா​வின் ஹூண்டாய் தொழிற்சாலையில் சட்டவிரோதமாக பணியாற்றிய 475 பேர் கைதுக்குப் பிறகு, அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்தி பயிற்சி அளிக்க வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்​கா​வின் ஜார்​ஜியா மாகாணத்​தில் உள்ள மிகப்பெரிய ஹூண்டாய் பேட்டரி தொழிற்சாலையில் கடந்த வாரம் அமெரிக்க குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில் 475 பேர் சட்டவிரோதமாக பணியாற்றியது தெரிய வந்துள்ளது. பலரும் விசா காலம் முடிவடைந்து அங்கு பணியாற்றி வந்துள்ளனர்.

இதையடுத்து சட்டவிரோதமாக பணியாற்றியவர்களை அமெரிக்க அதிகாரிகள் கை விலங்கிட்டு அழைத்துச் சென்றனர். அமெரிக்க அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அவர்களில் பெரும்பாலானோர் தென் கொரியா நாட்டைச் சேர்ந்தவர்கள்.

கைது செய்யப்பட்டுள்ள தென் கொரியாவைச் சேர்ந்தவர்களை மீட்க அந்த நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள தென் கொரியா, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு கைதானவர்கள் பத்திரமாக தாயகம் அழைத்து வரப்படுவார்கள் என்று கூறியுள்ளது.

"அவர்கள் சட்டவிரோதமாக பணியாற்றியவர்கள். அதிகாரிகள் தங்கள் வேலையைத்தான் செய்துள்ளனர்" என்று டிரம்ப் இதுபற்றி கூறியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக டிரம்ப், அமெரிக்காவில் வெளிநாட்டு முதலீடுகளை வரவேற்பதாகவும் அதேநேரத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள், அமெரிக்காவின் குடியேற்றச் சட்டங்களை மதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

அமெரிக்​கா​வின் ஜார்​ஜியா ​ஹூண்டாய் பேட்டரி தொழிற்சாலையில் நடைபெற்ற ரெய்டுக்குப் பிறகு, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால், அமெரிக்காவின் குடியேற்றச் சட்டங்களை மதிக்க வேண்டும் என்பதுதான்.

வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகள் வரவேற்கப்படுகின்றன. உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகளை உருவாக்க, சிறந்த தொழில்நுட்ப திறன்மிக்க உங்கள் நாட்டினரை அமெரிக்காவுக்கு சட்டப்படி கொண்டுவர நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம்.

அதற்கு பதிலாக உங்களிடம் நாங்கள் கேட்பது என்னவென்றால், நீங்கள் அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். நாம் அனைவரும் கடினமாக உழைத்து இந்த நாட்டை உற்பத்தி ரீதியாக மட்டுமின்றி, நம்மிடையே உள்ள ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தும்விதமாக ஒன்றாக உழைப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.

summary

Foreign companies need to train Americans after Hyundai raid, says Trump

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.