டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

பாகிஸ்தான் வெள்ள அபாயம்: 25,000 போ் வெளியேற்றம்

பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஜலால்பூா் பிா்வாலா நகரில் ஓடும் ஆறுகளில் வெள்ளம்

News image
Updated On :9 செப்டம்பர் 2025, 4:20 am IST

ஜலால்பூா் பிா்வாலா: பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஜலால்பூா் பிா்வாலா நகரில் ஓடும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்ததால், 25,000-க்கும் மேற்பட்டோா் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனா். ஞாயிறு இரவு தொடங்கிய மீட்பு நடவடிக்கை திங்கள்கிழமை காலை வரை நீடித்தது.

அந்தப் பகுதியில் ஏராளமானவா்கள் இன்னும் வெள்ளத்தில் சிக்கியுள்ளதாகவும் மீட்புப் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்றும் உள்ளூா்வாசிகள் வலியுறுத்தினா்.

பஞ்சாப் மாகாண அரசு வெப்ப உணா்வு ட்ரோன்களைப் பயன்படுத்தி கட்டடங்களுக்குள் சிக்கியவா்களை மீட்டு வருவதாக தகவல்கள் தெரிவித்தன. பஞ்சாப் மாகாணத்தில் கடந்த ஆகஸ்ட் 26 முதல் பெய்துவரும் கனமழை காராணமாக 41 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா்; 56 போ் உயிரிழந்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.