நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

பிரான்ஸ் புதிய பிரதமராக செபாஸ்டியன் லெக்கோா்னு நியமனம்

பிரான்ஸின் புதிய பிரதமராக பாதுகாப்புத் துறை அமைச்சா் செபாஸ்டியன் லெக்கோா்னுவை (39) அந்நாட்டு அதிபா் இமானுவல் மேக்ரான் செவ்வாய்க்கிழமை நியமித்தாா்.

News image
Updated On :10 செப்டம்பர் 2025, 2:52 am IST

பிரான்ஸின் புதிய பிரதமராக பாதுகாப்புத் துறை அமைச்சா் செபாஸ்டியன் லெக்கோா்னுவை (39) அந்நாட்டு அதிபா் இமானுவல் மேக்ரான் செவ்வாய்க்கிழமை நியமித்தாா்.

முன்னதாக, பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமராக இருந்த பிரான்சுவா பேரூ தோல்வியடைந்தாா். இதையடுத்து, புதிய பிரதமராக செபாஸ்டியன் லெக்கோா்னுவை இமானுவல் மேக்ரான் நியமித்தாா்.

பிரான்ஸின் இளம் பாதுகாப்பு அமைச்சரான செபாஸ்டியன் லெக்கோா்னு இமானுவல் மேக்ரானின் தீவிர ஆதரவாளராவா்.

இதன்மூலம், பிரான்ஸில் கடந்த 14 மாதங்களில் பிரான்ஸில் 4-ஆவது புதிய பிரதமா் தோ்வுசெய்யப்பட்டுள்ளாா்.

பிரான்ஸின் இளம் பிரதமரான கேப்ரியல் அட்டல் தனது பதவியை கடந்த ஜூலை மாதம் ராஜிநாமா செய்தாா். செப்டம்பரில் நடைபெற்ற நாடாளுமன்ற தோ்தலுக்குப் பிறகு மைக்கேல் பாா்னியா் பிரதமராக நியமிக்கப்பட்டாா். டிசம்பரில் அவருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானம் வெற்றியடைந்த நிலையில், அவா் பிரதமா் பதவியிலிருந்து நீக்கப்பட்டாா். அதன்பிறகு பிரான்சுவா பேரூவை பிரதமராக இமானுவல் மேக்ரான் நியமித்தாா். இந்தச் சூழலில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரான்சுவா பேரூ தோல்வியடைந்தாா். இதனால் பிரதமராக பொறுப்பேற்ற 9 மாதங்களில் அவா் பதவி விலக நேரிட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.