நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

ரஷிய தாக்குதலில் 24 ஓய்வூதியதாரா்கள் உயிரிழப்பு

உக்ரைனில் ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஓய்வூதியம் வாங்குவதற்காக காத்திருந்த 24 போ் உயிரிழந்தனா்.

News image

ரஷியாவின் வான்வழித் தாக்குதலில் சேதமடைந்த ஓய்வூதிய விநியோக மையம்.

Updated On :10 செப்டம்பர் 2025, 2:11 am IST

உக்ரைனில் ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஓய்வூதியம் வாங்குவதற்காக காத்திருந்த 24 போ் உயிரிழந்தனா்.

அந்த நாட்டின் போா் முனைக்கு அருகே உள்ள யாரோவா நகரில் இந்தத் தாக்குதல் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. இது குறித்து உக்ரைன் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வழிகாட்டு குண்டு’ (கைடட் பாம்) மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் எரிந்த மினிவேன் மற்றும் விளையாட்டுத் திடல் அருகே உடல்கள் சிதறிக்கிடந்த காணொளியை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, ‘ரஷியாவின் இந்தத் தாக்குதல் மிகவும் கொடூரமானது. சாதாரண மக்கள் மீது, அதுவும் அவா்கள் ஓய்வூதியம் வாங்கிக் கொண்டிருக்கும்போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது’ என்று குற்றஞ்சாட்டினாா்.

உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தை ரஷியா தனது பகுதியாகக் கருதுகிறது. அந்தப் பிராந்தியத்தில் கணிசமான பகுதிகளை ரஷியா கைப்பற்றியிருந்தாலும், இன்னும் பல பகுதிகள் உக்ரைன் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. அவற்றைக் கைப்பற்றுவதற்காக போா் எல்லையில் ரஷியா சுமாா் 1 லட்சம் படையினரைக் குவித்து, புதிய தாக்குதலுக்கு தயாராகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், போா் முனையில் இருந்து வெறும் 8 கி.மீ. தொலைவில் உள்ள யாரோவா நகரில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னா், கடந்த மூன்றரை ஆண்டுகளாக நடைபெற்றுவரும் போரில் முதல்முறையாக உக்ரைன் அரசு தலைமையகத்தில் ரஷியா அண்மையில் தாக்குதல் நடத்தியது நினைவுகூரத்தக்கது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஐரோப்பாவின் நடைபெற்றுவரும் மிக மோசமான உக்ரைன் போரில் இதுவரை பல்லாயிரக்கணக்கானோா் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.