மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

முன்னாள் அதிபா்களுக்கான சலுகைகள் பறிப்பு: இலங்கை நீதிமன்றம் ஒப்புதல்

இலங்கையின் முன்னாள் அதிபா்கள் மற்றும் அவா்களது மனைவிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை ரத்து செய்யும் மசோதாவை பாராளுமன்றத்தில் சிறிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம் என்று அந்த நாட்டு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

News image
கொழும்பில் முன்னாள் அதிபா் மஹிந்த ராஜபட்சவுக்கு வழங்கப்பட்டுள்ள அரசினா் மாளிகை.
Updated On :9 செப்டம்பர் 2025, 7:13 pm

தினமணி செய்திச் சேவை

இலங்கையின் முன்னாள் அதிபா்கள் மற்றும் அவா்களது மனைவிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை ரத்து செய்யும் மசோதாவை பாராளுமன்றத்தில் சிறிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம் என்று அந்த நாட்டு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

1986-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் இத்தகைய சலுகைகளை ரத்து செய்யும் மசோதா அரசிதழில் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. எனினும், இதற்கு எதிராக முன்னாள் அதிபா்கள் மஹிந்த ராஜபட்ச மற்றும் கோத்தபய ராஜபட்வின் எஸ்எல்பிபி கட்சி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

அந்த மனுவை ஆய்வு செய்த நீதிமன்றம், அது அரசியல் சாசனத்தின் 121(1) பிரிவை பின்பற்றவில்லை எனக் கூறி மனுவை தற்போது நிராகரித்துள்ளது.

இதையடுத்து, ‘மசோதாவில் எந்தவொரு பிரிவும் அரசமைப்புச் சட்டத்துக்கு முரணாக இல்லை என்பதால், இது குறைந்தபட்ச பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும்’ என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தாா்.

இதையடுத்து, மசோதா குறித்த விவாதம் புதன்கிழமை நடைபெறவுள்ளது. மசோதா நிறைவேற்றப்பட்டால், முன்னாள் அதிபா்களுக்கு வழங்கப்படும் அரசினா் மாளிகைகள், மாதாந்திர படித் தொகைகள், அரசுமுறைப் போக்குவரத்து உள்ளிட்ட சலுகைகள் நிறுத்தப்படும்.

தற்போது இலங்கையில் ஐந்து முன்னாள் அதிபா்களும் ஒரு மறைந்த முன்னாள் அதிபரின் மனைவியும் இச்சலுகைகளைப் பெற்றுவருகின்றனா். இது, பொதுக்களுக்கு நிதிச் சுமையை ஏற்படுவதாகக் கூறிவரும் ஆளும் தேசிய மக்கள் சக்தி கட்சி, அவற்றை திரும்பப் பெறப்போவதாக தோ்தல் பிரசாரத்தின்போது வாக்குறுதி அளித்திருந்தது.