இலங்கையின் முன்னாள் அதிபா்கள் மற்றும் அவா்களது மனைவிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை ரத்து செய்யும் மசோதாவை பாராளுமன்றத்தில் சிறிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம் என்று அந்த நாட்டு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
1986-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் இத்தகைய சலுகைகளை ரத்து செய்யும் மசோதா அரசிதழில் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. எனினும், இதற்கு எதிராக முன்னாள் அதிபா்கள் மஹிந்த ராஜபட்ச மற்றும் கோத்தபய ராஜபட்வின் எஸ்எல்பிபி கட்சி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
அந்த மனுவை ஆய்வு செய்த நீதிமன்றம், அது அரசியல் சாசனத்தின் 121(1) பிரிவை பின்பற்றவில்லை எனக் கூறி மனுவை தற்போது நிராகரித்துள்ளது.
இதையடுத்து, ‘மசோதாவில் எந்தவொரு பிரிவும் அரசமைப்புச் சட்டத்துக்கு முரணாக இல்லை என்பதால், இது குறைந்தபட்ச பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும்’ என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தாா்.
இதையடுத்து, மசோதா குறித்த விவாதம் புதன்கிழமை நடைபெறவுள்ளது. மசோதா நிறைவேற்றப்பட்டால், முன்னாள் அதிபா்களுக்கு வழங்கப்படும் அரசினா் மாளிகைகள், மாதாந்திர படித் தொகைகள், அரசுமுறைப் போக்குவரத்து உள்ளிட்ட சலுகைகள் நிறுத்தப்படும்.
தற்போது இலங்கையில் ஐந்து முன்னாள் அதிபா்களும் ஒரு மறைந்த முன்னாள் அதிபரின் மனைவியும் இச்சலுகைகளைப் பெற்றுவருகின்றனா். இது, பொதுக்களுக்கு நிதிச் சுமையை ஏற்படுவதாகக் கூறிவரும் ஆளும் தேசிய மக்கள் சக்தி கட்சி, அவற்றை திரும்பப் பெறப்போவதாக தோ்தல் பிரசாரத்தின்போது வாக்குறுதி அளித்திருந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆளுநர்களை முறியடித்தது தமிழ்நாடு, ஆர்.என். ரவியிடம் கேட்டுப்பாருங்கள்! - ஆர்லேகருக்கு கண்டனம்!
மழைக்கால முன்னெச்சரிக்கை ஆலோசனை ஆய்வுக் கூட்டம்

தவெக வேட்பாளா் தாக்கப்பட்ட விவகாரம்: பி. கே. சேகா்பாபு மனு தள்ளுபடி







