2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

இஸ்ரேல் தாக்குதல்: கத்தார் விரைந்தார் அமீரக அதிபர்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் கத்தார் சென்றுள்ளது குறித்து..

ஐக்கிய அரபு அமீரக அதிபர் - கத்தார் மன்னர் - எக்ஸ்

Published On :

கத்தார் நாட்டின் மீது இஸ்ரேல் அத்துமீறி நடத்திய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் அந்நாட்டுக்கு நட்பு ரீதியாகப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

கத்தார் தலைநகர் தோஹாவில், நேற்று (செப்.9) ஹமாஸ் படையின் முக்கிய தலைவர்களைக் குறிவைத்து எந்தவொரு முன்னறிவுப்பும் இன்றி இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இந்தத் தாக்குதல்களுக்கு, பல்வேறு அரபு நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முஹம்மது பின் சயீத் அல் நஹ்யான் கத்தாருக்கு இன்று (செப்.10) நட்பு ரீதியாகப் பயணம் மேற்கொண்டுள்ளார். மேலும், கத்தார் மன்னர் தமீம் பின் ஹமாத்தை சந்தித்த அவர், அமீரக நாடுகளின் ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மத்திய கிழக்கில் உள்ள அரபு நாடுகள் கத்தாருக்கு தங்களது ஆதரவுகளைத் தெரிவித்து வருகின்றன. மேலும், நட்பு ரீதியாக துபையின் பட்டத்து இளவரசர் ஹம்தான் பின் முஹம்மது அல் மக்தூம் அந்நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்துடன், ஜோர்டான் மற்றும் சௌதி அரேபியா ஆகிய நாடுகளின் பட்டத்து இளவரசர்களும், இன்று அல்லது நாளை கத்தாருக்கு ஆதரவாகப் பயணம் மேற்கொள்ளக் கூடும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Summary

The President of the United Arab Emirates has made a goodwill visit to Qatar following Israel's unlawful airstrikes on the country.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.