6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நேபாளத்தில் அமைதி திரும்பியதா?

நேபாளத்தில் தெருக்கள்தோறும் பாதுகாப்புப் படையும் தீயணைப்பு வாகனங்கள் மட்டுமே உலவுகின்றன.

News image
- PTI
Updated On :10 செப்டம்பர் 2025, 6:16 am

இணையதளச் செய்திப் பிரிவு

நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டத்தில் நாடு முழுவதும் பொதுச் சொத்துக்கள் சூறையாடப்பட்டதையடுத்து, நாட்டில் அமைதிக்கான முயற்சியை அந்நாட்டு ராணுவம் கையிலெடுத்துள்ளது.

நேபாளத்தில் சமூக வலைதள செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராகவும், அரசின் மிகப்பெரிய ஊழலுக்கு எதிராகவும் அந்நாட்டு இளைஞர்கள் திங்கள்கிழமையில் போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்தப் போராட்டத்தில் நாடு முழுவதும் பல்வேறு அரசுக் கட்டடங்கள் சூறையாடப்பட்டு, பொதுச் சொத்தும் பெரிதளவில் சேதப்படுத்தப்பட்டன.

இந்த நிலையில், நாடுதழுவிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கிய நேபாள ராணுவம், நாட்டின் முக்கிய நகரங்களில் கட்டுப்பாடுகளை விதித்தது.

பொதுமக்களின் மீதான தாக்குதல் மற்றும் பொதுச் சொத்துக்களின் மீதான சேதம் குறித்து கவலை தெரிவித்த ராணுவம், தேவைப்பட்டால் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறும் பொதுமக்களை வலியுறுத்தியது.

தெருக்கள்தோறும் பாதுகாப்புப் படையும், தீவைக்கப்பட்ட கட்டடங்களில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள விரையும் தீயணைப்பு வாகனங்கள் மட்டுமே திரிவதால் தெருக்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

நாட்டில் நாள்தோறும் சுமார் 5,000 இளைஞர்கள், வேலைதேடி வெளிநாடுகளுக்குச் செல்வதாகக் கூறியும், சமூக வலைதளச் செயலிகள் மீதான தடையை நீக்கக் கோரியுமே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் 19 பேர் கொல்லப்பட்டதுடன், பிரதமர் பதவியை சர்மா ஓலி ராஜிநாமாவும் செய்து விட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.