அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!தேசிய கட்சியின் மாநில தலைவர்களான செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன் தோல்வி!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

பிணைக் கைதிகளின் விடுதலைக்கான நம்பிக்கையை நெதன்யாகு கொன்று விட்டார்: கத்தார் பிரதமர்!

தோஹா நகரத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்து கத்தார் பிரதமரின் கருத்து...

News image

இஸ்ரேல் பிரதமர் - கத்தார் பிரதமர் - படம்: ஏபி - எக்ஸ்

Updated On :11 செப்டம்பர் 2025, 5:01 pm IST

கத்தார் தலைநகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் மூலம், ஹமாஸ் சிறைப் பிடித்துள்ள பிணைக் கைதிகளுக்கான நம்பிக்கையை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொன்றுவிட்டதாக, அந்நாட்டு பிரதமர் ஷேயிக் முஹம்மது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி கூறியுள்ளார்.

கத்தார் தலைநகர் தோஹாவின் மீது, பாலஸ்தீன கிளர்ச்சிப்படையான ஹமாஸின் தலைவர்களைக் குறிவைத்து, கடந்த செப்.9 ஆம் தேதி இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. அத்துமீறி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு ஏராளமான நாடுகளின் அரசுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பு பேசிய கத்தார் பிரதமர் ஷேயிக் முஹம்மது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி, தோஹா மீதான இஸ்ரேலின் தாக்குதல் வளைகுடா நாடுகளிடையே மிகுந்த கோவத்தைத் தூண்டியுள்ளதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுகுறித்து, செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:

“தாக்குதல் நடைபெற்ற அன்று காலை நான் பிணைக் கைதி ஒருவரது குடும்பத்தினருடன் பேசினேன். அவர்கள் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து கவனிக்கின்றனர். ஆனால், நேற்று நடைபெற்ற தாக்குதலின் மூலம் நெதன்யாகு அந்த பிணைக் கைதிகளுக்கான அனைத்து நம்பிக்கையையும் கொன்றுவிட்டார் என நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, கத்தாரின் தோஹா நகரத்தின் மீதான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களின் மூலம் 6 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

Qatar's Prime Minister Sheikh Mohammed bin Abdulrahman al-Thani has said that Israeli Prime Minister Benjamin Netanyahu has killed the hope of hostages held by Hamas with an attack on the capital.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.