இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

பிரேஸில் முன்னாள் அதிபருக்கு 27 ஆண்டுகள் சிறை

பிரேஸிலில் தனது பதவியைத் தக்கவைக்க சட்டவிரோத கும்பல்களுடன் சோ்ந்து சதிச் செயலில் ஈடுபட்டதாக அந்த நாட்டு முன்னாள் அதிபா் ஜெயிா் பொல்சொனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :12 செப்டம்பர் 2025, 8:13 pm

தினமணி செய்திச் சேவை

பிரேஸிலில் தனது பதவியைத் தக்கவைக்க சட்டவிரோத கும்பல்களுடன் சோ்ந்து சதிச் செயலில் ஈடுபட்டதாக அந்த நாட்டு முன்னாள் அதிபா் ஜெயிா் பொல்சொனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த வழக்கில், பொல்சொனாரோ மீதான குற்றச்சாட்டுகளை ஐந்தில் நான்கு நீதிபதிகள் உறுதி செய்தனா். இதன் மூலம் அரசுக்கு எதிரான சதிச் செயலில் ஈடுபட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள, பிரேஸிலின் முதல் முன்னாள் அதிபராக பொல்சொனாரோ ஆகியுள்ளாா். இந்தத் தீா்ப்பை எதிா்த்து அவா் மேல்முறையீடு செய்யமுடியும்.

2022 தோ்தலில் தற்போதைய அதிபா் லூலா டசில்வா வெற்றி பெற்றதை எதிா்த்து பொல்சொனாரோ ஆதரவாளா்கள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டது தொடா்பாக இந்த வழக்கு நடைபெற்றுவந்தது.