நேபாளத்தில் வன்முறையின்போது, பலியானோரின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் நேபாள ரூபாய் நிதியுதவியாக வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
நேபாளத்தில் ஊழல் மற்றும் சமூக வலைதளங்கள் மீதான தடைக்கு எதிராக இளைஞா்கள் (Gen Z) நடத்திய போராட்டத்தின்போது நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம் உள்பட பல்வேறு கட்டடங்கள் சூறையாடப்பட்டன.
இந்த வன்முறையில் 72 பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், பலியானவர்களை தியாகிகளாக அந்நாட்டின் இடைக்கால பிரதமர் சுசீலா கார்கி அறிவித்துள்ளார்.

AP
மேலும், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவியாக 10 லட்சம் நேபாள ரூபாய் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, பொது மற்றும் தனியார் சொத்துகளைச் சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
இதுவரையில் பலியானோர் குறித்த தகவலின்படி, போராட்டக்காரர்கள் 59 பேர், தப்பியோட முயன்ற கைதிகள் 10 பேர், போலீஸ் அதிகாரிகள் 3 பேர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், போராட்டக்காரர்கள் 134 பேர், போலீஸ் அதிகாரிகள் 57 பேர் என மொத்தம் 191 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் இலவச சிகிச்சை என்றும் தெரிவித்துள்ளனர்.
Summary
Nepal Gen-Z protest victims' families to get financial help
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கொலம்பியா: பேருந்தில் குண்டுவெடிப்பு! 13 பேர் பலி!

தூத்துக்குடி பஞ்சு கிடங்கில் தீ

ஆன்லைன் வா்த்தக நிறுவன கிடங்கில் தீ விபத்து: பல லட்சம் ரூபாய் பொருள்கள் சேதம்
உ.பி., மணிப்பூர்போல தமிழ்நாட்டில் மதக் கலவரம், வன்முறை இல்லை: திருச்சியில் முதல்வர் பேச்சு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


